Followers

Monday, November 18, 2019

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஒருவருடைய வாழ்வில் அதிகபட்சம் பிரச்சினைகளாக வருவது ஏழரைச்சனி என்ற ஒன்றாக இருக்கும். இது எந்த காலக்கட்டத்திலும் வந்தாலும் அவரை ஒரு வழிப்படுத்திவிட்டு செல்லும் தன்மை உடையது.

ஏழரைச்சனியில் ஒருவருக்கு வரும்பொழுது அது பல அவமானங்களை கொடுத்துவிடுகின்றது. அவர் எந்தவித வம்புக்கும் போகாதவர்களாக இருந்தாலும் சரி அவரையும் ஒரு வழி செய்துவிடும். ஏழரைச்சனி என்றால் அதிகமாக பாதிப்பை தருவது அவமானம் என்ற ஒன்று அதற்க்கு அடுத்தபடியாக மருத்துவசெலவு இவை தான் அதிகமாக நடைபெறுகின்றது.

இதுவரை கடன் என்றால் என்ன என்று கூட தெரியாதவர்களை கூட அவரையும் கடனில் சிக்க வைத்து அவரை போட்டு ஒரு வழி செய்து அவமானப்பட வைத்துவிடும். பிறர் மத்தியில் அவரின் மானம் காற்றில் பறக்க வைத்துவிடும் தன்மை ஏழரைச்சனிக்கு உண்டு.

ஏழரைச்சனி என்றால் அது இரண்டாவது சுற்று பொங்கு சனியாக தானே வேலை செய்யும் என்று சொல்லுவார்கள். பணம் எப்படியும் வந்துக்கொண்டு தான் இருக்கும். பல இடத்தில் ஏழரைச்சனி அவமானம் கடனையும் அதிகமாக கொடுக்கின்றது.

ஏழரைச்சனி தொடங்குகின்றது அல்லது நடந்துக்கொண்டு இருந்தால் நீங்கள் அவமானத்தில் சிக்கும் தன்மையை உருவாக்கும் என்பதால் எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். கசப்பு தன்மையுடைய உணவை அதிகமாக எடுத்தக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: