Followers

Friday, November 15, 2019

செல்வநிலையில் எச்சரிக்கை


வணக்கம்!
          நம்முடைய மனம் என்ன செய்யும் என்றால் நம்முடைய நிலை நன்றாக இருக்கும்பொழுது நாம் தான் நன்றாக இருக்கின்றோமே நாம் ஏன் சாமியை கும்பிடவேண்டும் சாமியை எல்லாம் கும்பிடவேண்டாம் என்று சொல்லும். 

பொதுவாக நாம் உலகத்தில் உள்ள அனைத்து விசயங்களையும் கேட்டாலும் கடைசியில் நம்முடைய மனம் சொல்லும் கருத்தை தான் ஒவ்வொரு மனிதனும் ஏற்றுக்கொள்வான். இது ஒரு சில வேலைகளில் நல்லது நடந்தாலும் பல வேலைகளில் உங்களை சிக்கலில் மாட்டிவிட்டதற்கும் இது தான் காரணமாக அமையும் என்பதை சிக்கலில் மாட்டிய பிறகு தான் நமக்கு புரியவரும்.

உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் சொகுசு வாழ்க்கையை கொடுப்பது எல்லாம் யார் என்று பார்த்தால் உங்களுக்கு நடக்கும் தீய தசாவாக இருக்கும். தீயகிரகங்கள் நல்ல சொகுசுயை கொடுத்து ஒரு நாெடியில் உங்களை கொண்டு போய்விடும்.

தீயகிரகத்தின் தசா அல்லது தீயகிரகத்தின் குணம் ஒருவருக்கு நல்ல சொகுசுயை கொடுத்து ஒரு பெரிய அடியை கொடுக்கும். நான் பார்த்த நிறைய ஜாதகங்களில் இந்த மாதிரி நிறைய நடந்து இருக்கின்றது. இதனை மனதில் கொண்டு தான் இந்த கருத்தை உங்களிடம் சொல்லுகிறேன்.

நான் நன்றாக இருக்க ஆரம்பித்தேன் சார் திடீர் என்று எங்கிருந்து தான் எமன் வந்தது என்று தெரியவில்லை கொண்டு சென்றுவிட்டது என்று சொல்லுவார்கள். இதனை எல்லாம் நீங்கள் தவிர்க்கவேண்டும் என்று என்றால் பணம் வரும்பொழுது நீங்கள் உஷாராக இருக்கவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: