Followers

Thursday, November 7, 2019

கர்மபலன்


வணக்கம்!
         ஒருவருக்கு வரும் கர்மபலன் என்பது மிக மிக குறைவாகவே வரும் ஆனால் நாம் அதனை மொத்தமாக எடுத்துக்கொண்டு அனைத்தும் கர்மா வழியாகவே நடைபெறுகின்றது என்று சொல்லிவிடுகிறோம்.

இந்த பிறவியில் மனிதன் செய்யும் தவறால் அவனுக்கு பிரச்சினை வருகின்றது. நிறைய பிரச்சினையை அவனே உருவாக்கிக்கொள்கிறான் அதன்பிறகு அவன் கர்மாவால் தான் பிரச்சினை வருகின்றது என்று வருந்துகிறான்.

முன்ஜென்மத்தில் இருந்து குறைவாகவே நல்லது மற்றும் கெட்டது வருகின்றது. இந்த நல்லது அல்லது கெட்டதை மனிதன் அதிகப்படுத்திக்கொள்கிறான். கர்மவினை எல்லாம் அந்தளவுக்கு நாம் சொல்லுவது போல நடப்பதில்லை என்பது என்னுடைய கருத்து.

நிறைய நீங்கள் தேடிச்சென்றால் உங்களுக்கே பல விசயங்கள் புலப்படும். ஆன்மீக தேடுதல் என்று இல்லாமல் அனைத்து தேடுதலிலும் இந்த விசயங்கள் எல்லாம் உங்களுக்கு புரியவரும். கர்மாவைப்பற்றி சொல்லுவதைவிட நீங்களே அதனை புரிந்துக்கொள்ள முடியும்.

அறிவு தேடுதலை அதிகப்படுத்திக்கொண்டே இருங்கள். உங்களுக்கு நிறைய புரிய வரும். இந்த பிறவியில் மனிதன் செய்யும் பாவங்களுக்கு தகுந்தார்போலவும் இந்த பிறவியிலேயே அவனுக்கு தண்டனையும் வருகின்றது. பாவம் என்றால் ஒரு சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டும் தான் அது என்ன என்பதைப்பற்றி வரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: