Followers

Saturday, November 9, 2019

இந்த பிறவியில் பெரிய பாவம்


வணக்கம்!
          தோஷம் வரும் வழியில் சரீர தாேஷத்தைப்பற்றி சொல்லிருந்தேன். சரீர தோஷத்தில் மேலும் ஒரு சரீர தோஷத்தைப்பற்றி பார்க்கலாம். பெரும்பாலும் இந்த தோஷத்தால் மட்டுமே பலர் பாதிப்படைகின்றனர்.

ஒரு சரீரம் உருவாகுவதற்க்கு முன்பே அதனை அழிக்கும் தோஷம் என்பது தான் இருக்கும் தோஷத்திலேயே அதிகமான தோஷமாக இருக்கும். கரு வளர்ந்து ஒரு மாதத்தில் அல்லது அதற்கு மேற்பட்ட மாதத்தில் ஒரு கருவை நாம் அழித்தால் அது பெரிய தோஷமாக உங்களுக்கு வந்துவிடும்.

பெரும்பாலானவர்கள் இந்த விசயத்தில் தவறு செய்துவிடுகின்றனர். இது பெரிய பிரச்சினையை கொடுக்கும் என்று தெரியாமல் தவறு செய்துவிடுகின்றனர். இது தான் பெரிய தோஷமாக உங்களுக்கு வந்துவிடும்.

கருக்கலைப்பு செய்வதால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் சரியாக வளரமாட்டார்கள். குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். எங்கு தவறு இருக்கின்றது என்பது தெரியாமலேயே இருக்கும். இளம்வயதில் அல்லது ஏதோ ஒரு காலக்கட்டத்தில் இதனை செய்துவிட்டு பிற்காலத்தில் கஷ்டபட நேரிடும்.

நான் நிறைய கோவிலுக்கு சென்று இருக்கின்றேன். நான் நிறைய வழிபாடு எல்லாம் செய்து இருக்கிறேன் எனக்கு எதுவும் சரியாக நடக்கமாட்டேன்கின்றது என்பார்கள். அவர்களின் குடும்பத்தில் இப்படிப்பட்ட தோஷம் இருந்தால் அவர்களு்க்கு எல்லாம் இப்படி தான் நடக்கும்.

கருகலைப்பு என்பதை செய்யாதீர்கள். முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் இந்த செய்தியை சொல்லுங்கள். முன்ஜென்மத்தில் நீங்கள் செய்த தவறை விட இந்த ஜென்மத்தில் நீங்கள் செய்யும் இந்த தவறால் பெரிய பாதிப்பு உங்களுக்கு மட்டும் இல்லாமல் உங்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: