Followers

Thursday, November 14, 2019

தோஷம் வரும் வழி


வணக்கம்!
         நமக்கு வரும் தோஷம் என்பது முன்ஜென்மத்தில் ஏற்பட்டதைவிட இந்த ஜென்மத்தில் ஏற்பட்ட பாவத்தால் தான் நிறைய வரும். இந்த ஜென்மத்தில் இந்த இடத்தில் என்று நான் சொல்லுவது நம்முடைய தந்தை அல்லது தாத்தா இவர்கள் செய்த பாவத்தால் வரும் தோஷம் உங்களை அதிகமாகவே பாதிக்க செய்யும்.

ஒருவருடைய தந்தை தன்னுடைய அண்ணன் அல்லது தம்பிக்கு சொந்த சொத்தை பிரித்து கொடுக்காமல் அவரை ஏமாற்றிக்கொண்டு அதனை அவர் அனுபவித்து இருக்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். இவரின் வாரிசுகளுக்கு பெரும்பாலும் செவ்வாய் தோஷம் ஏற்பட்டுவிடும்.

வாரிசுகளுக்கு எட்டில் செவ்வாய் அமர்ந்து அவர்களுக்கு மிக கடுமையான தோஷத்தை ஏற்படுத்திவிடும். ஒன்று திருமணம் நடக்காமல் போய்விடுவது உண்டு அல்லது திருமணம் நடந்தாலும் அவர்களின் வாழ்வு நன்றாக இருக்காது.

நான் பார்த்த நிறைய ஜாதகத்தில் இப்படிப்பட்ட தோஷம் இருக்கின்றது. இதனால் பாதிப்புகளும் அதிகமாகவே இருக்கின்றது. இதற்கு தீர்வு என்ன என்று பார்த்தால் பாதிக்கபட்டவனுக்கு நிலத்தை கொடுத்துவிடுங்கள். 

செவ்வாய் தோஷம் நிவர்த்தி செவ்வாய் தோஷத்திற்க்கு பரிகாரம் என்பது எல்லாம் கிடையாது. செவ்வாய் தோஷ நிவர்த்தி இதற்கு என்று நீங்கள் செய்ய முற்பட்டால் அவனின் நிலத்தை கொடுத்தவிடுவது நன்றாக இருக்கும். நிறைய பேர்கள் முருகனுக்கு விரதம் இருங்கள் என்று சொல்லுவார்கள். ஒரு சிலர் முருகன் கோவில் கோவிலாக சுற்றி வருவார்கள் இது எல்லாம் கண்டிப்பாக பரிகாரமாக அமையாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: