Followers

Saturday, November 2, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          சூரசம்ஹரத்தின் தொடர்ச்சியாக இதனை தருகிறேன். பெரும்பாலும் நமது ஆன்மீக நண்பர்கள் அனைவரும் தங்களின் சித்தர்களாக மாறுவதற்க்கு என்ன வழியே அதனை பின்பற்றி செல்வார்கள். 

முருகனின் தீவிர பக்தர்களாக இருக்கும் அன்பர்களுக்கு அவர் தன்னுடைய சித்தவித்தையை மானசீகமாக கற்றுக்கொடுப்பார். கந்தசஷ்டி தொடங்கிய நாளில் இருந்தே நமது நண்பர்கள் தங்களின் விரதத்தை தொடர்ந்து செய்து வந்திருப்பார்கள்.

கந்தசஷ்டி தொடங்கிய நாளில் இருந்து ஏதோ ஒரு முருகன் கோவிலுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் எனக்கு அவர்கள் செய்ததை வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்பியிருந்தனர்.

அனைத்து நண்பர்களுக்கு முருகனின் அருள் கண்டிப்பாக கிடைத்து இருக்கும். ஒரு சிலருக்கு காட்சி கூட ஏதோ ஒரு ரூபத்தில் கொடுத்து இருக்கலாம். இதனை எல்லாம் நான் சொல்லுவது ஒரு ஆன்மீகம் என்பதற்க்காக சொல்லவில்லை. நல்ல விசயங்கள் நடக்கவேண்டும் அது நடந்து இருக்கும் என்பதால் பகிர்ந்துக்கொள்கிறேன்.

அடுத்த வரும் ஒரு முருகனின் விஷேசத்தில் நாம் நிறைய செய்ய சொல்லுகிறேன் அதனை பின்பற்றி நீங்கள் செய்துக்கொள்ளுங்கள். முருகனின் சித்தவித்தை உங்களை ஆன்மீகத்தில் மிக முன்னேற்றம் அடைய செய்யும் என்பதால் இதனை செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: