Followers

Thursday, November 21, 2019

குருவே சரணம்


வணக்கம்!
          இரவில் படுப்பதற்க்கு முன்பு உங்களின் குரு சொன்ன வார்த்தைகளை நினைவுப்படுத்த வேண்டும் அல்லது அவர் எழுதிய புத்தகம் இருந்தால் அந்த புத்தகத்தை எடுத்து பத்து நிமிடமாவது படித்துவிட்டு அதன்பிறகு குருவிற்க்க நன்றி சொல்லிவிட்டு இரவில் படுத்து தூங்க ஆரம்பிக்கவேண்டும்.

இன்றைய காலத்தில் ஒவ்வொவருக்கும் இருக்கும் பிரச்சினையில் இரவில் தூக்கம் என்பது வரவில்லை என்று சொல்லுகின்றனர். பலருக்கு தூக்கம் வருவதில்லை என்பதற்க்காகவே போதை வஸ்துகளுக்கு அடிமையாகிவிடுகின்றனர்.

ஆன்மீகவாதி போதை வஸ்துகளை எடுக்கமுடியாது அதனால் உங்களின் குரு சொன்ன வார்த்தைகளை நீங்கள் நினைவுகளுக்கு எடுத்துக்கொண்டு சென்றால் உங்களின் ஆன்மீகவாழ்க்கையும் உங்களின் மனம் அமைதி அடைந்து தூக்கத்தை வரவழைக்கவும் நன்றாக இருக்கும்.

பல மதங்களில் அவர் அவர்களின் புனித நூலை எடுத்து படித்துவிட்டு அதன்பிறகு தான் தூங்குவதற்க்கு செல்வார்கள். உங்களின் குருவின் வார்த்தையும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். இரவில் நீங்கள் படுப்பதற்க்கு முன்பு எந்த வேலையை செல்கின்றீர்களோ அதுவே அன்றைய இரவு முழுவதும் வேலை செய்யும் படியாக இருக்கும்.

தீயகிரங்களின் பாதிப்பில் இருக்கும் நபர்களுக்கு அடிக்கடி இரவில் கண்விழிக்கும்படியாக இருக்கும். இதனை தவிர்ப்பதற்க்கும் மேலே சொன்ன வழிகளை நீங்கள் பின்பற்றி வரலாம். குருவின் பாதம் சரணம் அடைந்து இருந்தால் அனைத்து பிரச்சினையும் நீங்கி இரவை மிக சரியாக பயன்படுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: