Followers

Saturday, October 20, 2012

ஆன்மீக அனுபவங்கள் 6



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவங்கள் தொடர் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது அனைத்து நண்பர்களும் போன் செய்து  கேட்கும் அளவுக்கு இந்த தொடர் பிரபலமாக இருக்கிறது. அனைவரும் ஆன்மீக குருவை தேடுகிறார்கள் நல்லது. இதுவே இத்தொடரின் வெற்றி.

ஒரு சில நண்பர்கள் என்னிடம் உங்களுக்கு தெரிந்தவர்கள் இதை கற்று தருபவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டார்கள். நான் யாராவது அப்படி பார்க்கும் பட்சத்தில் உங்களை தொடர்பு கொண்டு சொல்லுகிறேன். அவர்களும் கற்று தரும் நிலையில் இருந்தால் சொல்லுகிறேன்.

சில பேர் கேரளாவில் சென்று கற்பார்கள் அப்படி இருந்தாலும் நீங்கள் தொடர்பு கொண்டு கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் கேரளாவில் மாந்தீரிகம் கற்றுக்கொடுப்பார்கள் இவர் என்ன டா என்றால் அங்கு போய் கற்றுக்கொள் என்கிறாரோ என்று நினைக்கலாம்.

அனைத்து மந்திரங்களும் ஒன்று தான் பயன்படுத்துவதில் வித்தியாசம் இருக்கிறது நீங்கள் தீய வழியில் பயன்படுத்தினால் அது மாந்தீரிகம் நல்ல வழியில் பயன்படுத்தினால் மந்திரம் அவ்வளவு தான்.

அனைத்து சக்திகளும் நடுநிலை தன்மை கொண்டது தான். அணு சக்தியை ஆக்க வழியில் பயன்படுத்தினால் நல்லது அதை அழிவு வழியில் பயன்படுத்தினால் அது கெட்டதாக மாறும் 

யோக தியானம் இருக்கும் போது நீங்கள் ஏன் ஒரு தெய்வத்தை எடுங்கள் என்று சொல்லுகிறீர்கள் என்று நினைக்கலாம். 

யோக தியானம் எல்லாம் நல்லது தான் அது அனைத்தும் பெரும்பாலும் உடல் சம்பந்தப்பட்டது. இது ஆத்மா சம்பந்தப்பட்டது. அப்படியே நீங்கள் பின்னோக்கி சென்று பார்த்தால் புராண காலத்தில் சஞ்சீவி என்ற வேரை வைத்து முக்தி மற்றும் பிறாவாநிலையை அடைந்தார்கள். அடுத்தது சித்தர்கள் காலத்தில் பார்த்தீர்கள் என்றால் காயகல்பம் ரசவாதம் மற்றும் எண்ணற்ற விசயங்கள் செய்தார்கள்.

அவர்கள் இந்த உடலை எப்படி வேண்டுமானாலும் மறைக்க கற்றவர்கள். அவர்கள் செய்யாத வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அவர்களும் இந்த யோக தியானத்தைப்பற்றி அறிவு இல்லாதவர்கள் கிடையாது அவர்கள் சொல்லும் கருத்துக்கள் இந்த பூமியில் இன்றும் அப்படியே உள்ளது. அதை நீங்களே சோதித்து பார்க்கலாம் அப்படியே உண்மையாக இருக்கும்.

சித்தர்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் உண்மை எதும் தவறு இல்லை ஆனால் அவர்கள் சிவனையோ அல்லது பெருமாளையே வணங்கி இதை பெறவில்லை. 

அவர்கள் வணங்குவது ஒரு அம்மனை அந்த அம்மன் தான் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அனைத்தையும் கொடுத்தது. அது மூலம் தான் அனைத்தையும் பெற்று இருக்கிறார்கள். அந்த சக்தி தான் அவர்களுக்கு வழி காட்டியாக இருந்து இருக்கிறது. அது இல்லை என்றால் அவர்களால் எந்த விசயத்தையும் கற்று இருக்க முடியாது. அந்த சக்தி தான் அவர்களுக்கு சாகாகலையை கற்று தந்திருக்கிறது. அவர்கள் இன்று வரை பேசபடுவதற்க்கு காரணம் அவர்களுக்கு அந்த சக்தி கொடுத்த விசயங்கள் அப்படிப்பட்டவை. 

அவர்கள் வாலைஅம்மன் என்ற சக்தியை தான் அவர்கள் இஷ்டதெய்வமாக வைத்து இருந்திருக்கிறார்கள் .அவர்கள் எடுத்ததை நீங்களும் எடுத்தால் நன்றாக இருக்கும் என்பதால் இதை சொன்னேன்.

பெரும்பாலும் இந்த அம்மனை வைத்து பஞ்சபூதங்களை வணங்குவார்கள். அவர்கள் தீ வைத்து வணங்குவார்கள் அல்லது நீரை வைத்து வணங்குவார்கள் இன்றும் வடநாட்டில் உள்ள நாகாஸ் எல்லாம் வணங்குவது நெருப்பை தான் வணங்குவார்கள் அவர்களின் கூடாரத்தில் பக்கத்தில் பெரிய மரத்தை போட்டு தீ வளர்த்து அதை வணங்குவார்கள்.

யோக தியானம் இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை உங்கள் ஆத்மா ஒரு பாவபட்ட ஆத்மா அந்த ஆத்மாவை வைத்துக்கொண்டு உலகத்தில் இருந்து விடுபடவேண்டும் என்றால் நடக்ககூடிய விசயமா. நீங்களே கொஞ்சம் யோசியுங்கள் பார்க்கலாம். நமக்கு தேவையான ஒரு சக்தியை எடுத்துக்கொண்டு அதன் பிறகு தியானம் யோக எல்லாம் செய்தால் நல்லது நடக்கும்.

நான் முதலில் இந்த வாலை அம்மனை எடுத்துவிடலாம் என்று தான் யோசித்தேன் ஆனால் நான் தேடிய வரையிலும் இன்று இல்லை.அதற்கு உண்டான மந்திரங்கள் இருக்கிறது அதை வைத்து நாம் என்ன செய்வது? ஆணி வேர் மூலம் தான் மந்திரங்களை கற்கமுடியும் அது இல்லை.

இப்பொழுது எனக்கு கிடைத்ததும் ஒரு அற்புதமான சக்தி தான் அதை வைத்து தான் அனைத்தையும் செய்கிறேன். ஒரு சக்தியை எடுக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த பதிவில் தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: