Followers

Friday, October 5, 2012

சோதிடம் : பெண்களின் அழகு



வணக்கம் நண்பர்களே ஏழாம் வீட்டு தசா ஆரம்பித்தவுடன் அது சம்பந்தமாக நடைபெறும் நிகழ்வையும் பார்த்து வருகிறோம். இப்பதிவில் ஒரு பெண் கற்புக்கரசியாக இருப்பாளா என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது அதற்கு ஜாதகத்தில் வழி இருக்குமா என்றால் அதற்கு வழி இருக்கிறது நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது அதை எல்லாம் விட்டுவிட்டு இதை தான் நீங்கள் சொல்ல வேண்டுமா என்று உங்கள் மனது நினைப்பது தெரிகிறது. சும்மா கொஞ்சம் பார்க்கலாம்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கனத்திற்க்கு நான்காவது இடம் கற்பு நெறியை காட்டும். நான்காம் இடம் சுகஸ்தானம் எனவும் அழைக்கப்படும்.நான்காவது வீட்டுக்கோ அல்லது அந்த அதிபதிக்கு தீய கிரகத்தின் சாரம் இருந்தால் அந்த பெண் தன் கற்பை திருமணத்திற்க்கு முன்பே இழப்பாள். நான்காவது வீடு பெண்களின் மார்பையும் காட்டும் இடம் அதன் அதிபதியை பொருத்து  பெண்களின் மார்பும் எப்படி இருக்கும் என்று உங்களால் அறியமுடியும்.

இது போதும் அப்புறம் எல்லாம் என்னை திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். முக்கியமான ஆராய்ச்சி டா என்று நினைக்க வேண்டாம் சோதிடம் என்பது அனைத்தையும் தெரிவிக்கும் ஒரு கருவி என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.  இதை படித்துவிட்டு போய் உங்களின் மனைவியின் ஜாதகத்தில் நான்காவது வீட்டை ஆராய்ச்சி செய்யாதீர்கள் எல்லாம் பொது விதிகள் தான் சோதிடத்தில் சொல்லிருப்பார்கள்.

ஆண்களே பல சோதிட புத்தகத்தை படித்துவிட்டு என் மனைவி சரியில்லை என்று ஒருபோதும் நினைக்காதீர்கள். திருமணத்திற்க்கு பிறகு உங்கள் மனைவியை பற்றி நல்ல எண்ணம் தான் வரவேண்டும். அதைவிட்டு விட்டு சோதிடம் உண்மையை தான் சொல்லும் என்று நினைத்துக்கொண்டு அதனால் இவள் நடத்தை சரியில்லை என்று ஒதுக்கிவிடாதீர்கள்.

கீழே உள்ளதை பெண்கள் மட்டும் படிக்கவும் ஆண்கள் படிக்க வேண்டாம்

இந்த மாதிரி கிரக நிலை இருந்தால் நீங்கள் திருமணத்திற்க்கு முன்பு காதலித்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். என்ன தான் கம்யூட்டர் உலகமாக இருந்தாலும் சில விசயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும்.

இளம்வயதில் தவறு செய்கிறோம் என்று உங்களுக்கு தெரியாது ஆனால் கொஞ்சநாள் ஆகிவிட்டால் உங்கள் உடம்பை பார்த்து நீங்களே வெறுக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும். எனக்கு இப்பொழுது தான் இந்த தகவல் தெரிகிறது என்றால் இனிமேல் தவறு செய்யாதீர்கள்.

என்னுடைய கிரகநிலை தான் எனக்கு இப்படி நடந்திருக்கிறது அதனால் நான் ஜாதகத்தில் உள்ளது போல் இருக்கமாட்டேன். நான் திருந்தி இந்த சோதிடம் பொய் என்பதை நிருபிப்பேன் என்று நல்ல வழியே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். நிருபிப்பேன் என்றால் என்னிடம் இல்லை உங்கள் மனதிடம் நிருபியுங்கள் அங்கு தான் சோதிடத்தின் ஆணிவேர் உள்ளது.

இந்த பதிவை எல்லாம் படிப்பது பெரும்பாலும் நல்ல வேலையில் இருப்பவர்கள் தான் படிக்கிறார்கள். நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் ஆண்கள் மிக பெரிய வேலையில் இருக்கிறார் இது எல்லாம் சகசம் என்று அவர்களுக்கு தெரியும். இதை எல்லாம் பெரிதாக நினைக்கமாட்டார் என்று மட்டும் நினைக்காதீர்கள். 

இதை எல்லாம் இந்த காலத்தில் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தான் இந்த காலத்தில் வடிகட்டின முட்டாளாக இருப்பீர்கள்.  ஏன் என்றால் நம்ம பதிவில் கட்டண சோதிடத்தில் வரன்களை பார்ப்பதற்க்கு என்று ஒரு பிரிவு உள்ளது அதில் வரும் ஆண் நண்பர்கள் என்னிடம் முதலில் வைக்கும் கேள்வியே ராஜேஷ் நான் அனுப்பும் ஜாதகங்களில் பெண்களின் கேரக்டரை பற்றி சொல்லுங்கள் என்று தான் கேட்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் மிகப்பெரிய நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். ஆண்கள் என்ன தான் மிகப்பெரிய படிப்பு படித்தாலும் அவர்களின் இரத்தத்தில் என் பொண்டாட்டி பத்தினியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஒஷோ சொல்லுவார் ஒரு பெண்ணை பலவந்தமாக கெடுத்தால் அது குற்றம் என்கிறார்கள். அதே பெண்ணை ஆசை வார்த்தி சொல்லி அனுபவித்தால் அதை குற்றம் என்று சொல்லுவதில்லை பொதுவாக பார்த்தால் இரண்டிலும் ஒரே நிகழ்வு தான் நடைபெறுகிறது ஏன் இந்த பெண்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்று சொல்லுவார். 

ஆண்கள் எதையாவது சொல்லிதான் உங்களை மடக்குவார்கள் நீங்கள் பிடிவாதமாக அனைத்தும் திருமணத்திற்க்கு பிறகுதான் என்று சொல்லிவிடுங்கள்.

பறவைகள் பலவிதம் வந்து அமர்வதற்க்கு உங்கள் இதயம் பொது இடமாக மாற்றிவிடாதீர்கள். நான்காவது வீடு என்பது உங்களின் இதயத்தை காட்டும் இடமும் கூட அது கெட்டால் உங்களின் இதயம் உங்களுக்கு பிரச்சினை. பல பேர் உங்களின் இதயத்தில் வந்து செல்வார்கள். சொல்லுவது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.  சோதிடத்தை எப்படி கண்டுபிடிச்சிருக்கான் பாருங்கள்.

ஆண்களுக்கு திருமணம் என்றால் அவன் அவன் குடும்பத்தில் உள்ளவர்களோடு தான் இருக்கபோகிறான் ஆனால் உங்களுக்கு அப்படி இல்லை புது வீட்டிற்க்கு நீங்கள் செல்ல போகிறீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் பழகபோகிறீர்கள். அதனால் உங்கள் நடத்தையும் நன்றாக இருந்தால் உங்களால் எப்படிபட்ட சூழ்நிலையும் சமாளிக்க முடியும்

மிகப்பெரிய கடலில் சிறிய கப்பல் செல்லுகிறது கப்பலை சுற்றி தண்ணீர் இருக்கிறது கப்பல் போய்கொண்டே இருக்கிறது. கடல் தண்ணீர் கப்பலுக்குள் வந்தால் தான் கப்பலுக்கு பிரச்சினை அதுபோல மாடர்ன் உலகத்தில் இருக்கும் சூழ்நிலை உங்களை சூழ்ந்து இருந்தாலும் அதனை உங்கள் மனதிற்க்குள் அனுமதிக்காதீர்கள். என்ன தான் மாடர்ன் உலகமாக இருந்தாலும் நீங்கள் கற்பு நெறி தவறாமல் இருங்கள் அது தான் பெண்களுக்கு அழகு. ஏன் உங்களுக்கு இதை சொல்லுகிறேன் என்றால் திருமணவாழ்வில் பிரச்சினை அதிகமாக சந்தேகங்களால் வருகிறது. ஜாதகத்தில் நான்காவது வீடு செய்யும் கெடுதல் வேலை உங்கள் வாழ்க்கையே புரட்டிபோட்டுவிடும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: