Followers

Monday, October 22, 2012

சோதிடம்: தெய்வங்களுக்கு ஒரு ஆலோசனை



வணக்கம் நண்பர்களே இது பெற்றோர்களுக்காக பதிவு. திருமணம் ஆனாவர்கள் மட்டும் படிக்க வேண்டும்.இளைஞர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என்னுடன் பேசும் பெற்றோர்கள் அனைவரும் என்னிடம் கேட்கும் கேள்வி என் பையன் திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளமாட்டேன்கிறான். என் பெண் திருமணத்திற்க்கு ஒத்துக்கொள்ளமாட்டேன்கிறாள். நீ யாராவது காதல் பண்ணிக்கொண்டு இருந்தாலும் சொல்லு நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் சொல்லி பார்த்துவிட்டோம் ஆனால் அதற்கு அவன்/அவள் நான் யாரையும் காதல் செய்யவில்லை எனக்கு திருமணம் பிடிக்கவில்லை என்று சொல்கிறான் /ள் என்ன செய்வது என்று பல அப்பா அம்மாக்கள் என்னிடம் கண்ணீர் விடுகிறார்கள்.

நாங்கள் இதுவரை யாருக்கும் தீங்கு செய்யவில்லை ஆனால் எங்களுக்கு ஏன் கடவுள் இப்படி சோதனை செய்கிறார் என்று தெரியவில்லை போகாத கோவில் இல்லை என்று என்னிடம் சொல்லுகிறார்கள். நாங்கள் செய்தா பரிகாரம் இல்லை என்று சொல்லுகிறார்கள். 

நீங்கள் முதலில் ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள் இப்பிறவியில் நீங்கள் தவறு செய்வதை இப்பிறவியில் அனுபவிப்பது என்பது குறைவாக தான் இருக்கும் உங்களின் முப்பிறவியில் செய்த வினைகள் பின் தொடரும் சோதிடம் என்பதே முற்பிறவியின் செய்த வினைக்கு இப்பிறவியில் என்ன பலன் என்று சொல்லுவது தான் நான் பூர்வ புண்ணியத்தை பற்றி நிறைய எழுதும் போதே என்னிடம் இந்த கேள்வியை பல பேர் கேட்டார்கள். ஏன் இந்த வீட்டிற்க்கு இவ்வளவு முக்கியதுவம் கொடுக்கிறீர்கள். பூர்வபுண்ணியத்தில் இருந்து தான் அனைத்து வீட்டிற்க்கும் முன்வினை சப்ளை ஆகும் என்பதை மனதில் வையுங்கள்.

பரிகாரம் செய்யும் போது கூட பூர்வபுண்ணியாதிபதியை சாந்தபடுத்திதான் செய்ய வேண்டும் பல பேர் இதனை கவனிக்க தவறுகிறோம். முதலில் களத்திரபாவம் கெட்டால் திருமணத்தில் பிரச்சினை ஏற்படும். குரு,சுக்கிரன் போன்றவர்களின் நிலையும் வைத்து திருமணத்தை பார்க்க வேண்டும். இது கூட ஒரு சில நேரத்தில் இறங்கி திருமணத்தை நடத்தும் வாய்ப்பை உருவாக்கும்.

ஒரு ஜாதகத்தை எடுத்தால் அதில் ஒரே கட்டத்தில் மூன்று அல்லது நான்கு கிரகங்கள் உட்காரும் போது திருமண வாழ்வில் அதிகமாக விளையாடி விடும். இந்த மாதிரி அமைப்பு வரும்போது கடுமையான சந்நியாசி யோகத்தை கொடுத்துவிடும். திருமணத்தில் ஈடுபாடு வராது. இந்த மாதிரி அமைப்பு உள்ளவர்கள் இளம் வயதிலேயே குடும்பத்தை விட்டு பிரிந்துவிடுவார்கள். அவர்கள் வேலை விசயமாக வெளியில் இருந்தாலும் வீட்டிற்க்கு வருவது என்பது அவர்களுக்கு பிடிக்காது. யாரிடமும் பேசாமல் தனிமையை விரும்புவார்கள்.

நீங்கள் வீட்டிற்க்கு கூப்பிட்டாலும் வேலை அதிகமாக இருக்கிறது அலுவலகத்தில் வேலை பளு காரணமாக வரமுடியாது அம்மா அடுத்த தடவை வருகிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி உங்களை தவிர்ப்பார்கள். ஏன் என்றால் வீட்டிற்க்கு வந்தால் நீங்கள் தொந்தரவு செய்து திருமணத்தை நடத்திவிடுவீர்கள் என்று நினைக்கிறார்கள்.

இவர்களின் வாழ்க்கையை பற்றி சொல்லுகிறேன் பாருங்கள் இவர்கள் அதிகமான அறிவை அடைந்தவர்கள். இவர்கள் படிப்பிலும் கெட்டிகாரார்களாக இருந்து இருப்பார்கள் அதனால் ஒரு நல்ல நிலையில் இன்று இருக்கலாம். உலக விசயங்கள் மீது அதிக ஈடுபாடு இருந்து இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் யாராவது ஒருவரை காதல் செய்து இருப்பார்கள். காதலை வேண்டும் என்றே பிரச்சினையாக்கி பிரிவை ஏற்படுத்தி இருப்பார்கள். இதனை ஏற்படுத்தியது இவர்கள் கிடையாது இவர்களின் கிரகங்கள் அப்படி செய்து இருக்கின்றன ஏன் என்றால் அவர்களை எல்லாவிதத்திலும் அடிப்பட்டு சந்நியாசத்தை அடைய வேண்டும் என்று அப்படி செய்யும்.

ஒரு கிரகம் உங்களை தாக்குவது என்றாலும் அது உடனே வந்து உங்களை தாக்காது அதுக்கான வேலையை அது நீங்கள் பிறக்கும் போது இருந்தே ஆரம்பிக்கும் எல்லாவிதத்திலும் தயார்படுத்தி உங்களை தாக்கும். ஏன் மரணம் கூட அப்படி தான் நீங்கள் என்று பிறந்தீர்களோ அன்றே உங்களுக்கு நாள் குறித்து உங்களை கொல்ல வேலை ஆரம்பித்துவிடும். அதைபோல தான் இந்த நிலையும் அதாவது சந்நியாசியாக போக வேண்டும்..

இவர்கள் உலகத்தின் மீது அதிக சிந்தனை செயது கொண்டு இருப்பார்கள் சில பேருக்கு நரை முடி வருவது கூட அதிக சிந்தனை தான். இவர்கள் திருமண விசயத்தில் அதிக ஈடுபாடு காட்டதற்க்கு காரணம் நமக்கு வருபவள் அல்லது வருபவன் நம்மை மாதிரி இருப்பாரா அல்லது இருப்பாளா என்று நினைத்துக்கொண்டு திருமணத்தை தள்ளிபோடுவார்கள்.

இவன் ஏன் உலகத்தை பற்றி நினைக்க வேண்டும். எங்களை பற்றி நினைக்க வேண்டியது தானே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது இருந்த ஒரு சாமியாரையும் டிவியில் போட்டு காலி பண்ணிட்டானுவோ கிரகங்கள் ஏதாவது ஒரு புது சாமியபாரை உருவாக்க வேண்டும் கிரகங்களுக்கு உங்க பையன் உங்க பொண்ணு  தான் கிடைத்து இருக்கிறார்கள் என்ன செய்வது. கோபபட வேண்டாம் தெய்வங்களே இந்த பசங்க இப்படி தான் பண்ணுவானுங்க வழி சொல்லுகிறேன்.

மூன்று கிரகங்கள் ஒரு வீட்டில் இருக்கும் போது 30 வயதில் திருமணம் நடைபெறும் நான்கு கிரகங்கள் ஒரு வீட்டில் இருக்கும் போது 35 வயதில் திருமணம் நடைபெறும்.

நீங்கள் வரன் பார்க்கும் போது பணம் படிப்பு எல்லாத்தையும் விட்டு விட்டு நல்ல ஆன்மிகவாதியாக பாருங்கள். இவர்களின் தேடல்களுக்கு அது தான் நன்மை பயக்கும்.

பையனுக்கு பெண் பார்த்தால் பையனிடம் சொல்லும் போது பெண் மிக சிறந்த ஆன்மிகவாதி உலக விசயங்களின் மீது அக்கறை கொண்டவள் என்னுடன் பேசும் போது கூட நீங்கள் என்ன என்ன விரதம் இருக்கிறீர்கள் என்று கேட்டாள் டா என்று சொல்லுங்கள் பையன் அமெரிக்காவில் இருந்து அடுத்த பிளைட்டில் ஒடி வந்துவிடுவான்.

உங்கள் பெண்ணுக்கு வரன் பார்த்தால் பையன் சிறந்த சிவ பக்தன். கிரிவலம் மாதம் தோறும் செய்கிறான். பல வெப்சைட்களை படித்து நல்ல மந்திர ஞானம் உள்ளவன். சைவம் தான் சாப்பிடுவான் அப்படி என்று சொன்னீர்கள் என்றால் உங்கள் பெண் உடனே ஒத்துக்கொள்வாள்.

உண்மையான ஒரு விசயத்தை சொல்லுகிறேன் இவர்களுக்கு வரன் பார்க்கும் போது கண்டிப்பாக ஆன்மிகவாதியை தான் பார்க்க வேண்டும். அப்பொழுது மட்டுமே இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.

உங்கள் மகனை போல் இருப்பவர்கள் அதிகம் பார்வையிடுவது நம்ம சைட்டை தான் அவர்களின் தீனிக்கு இந்த சைட் ஏதோ ஒரு விதத்தில் பயன்படுகிறது என்னை பற்றி பெருமையாக சொல்லிக்கொள்ளவில்லை. உண்மையை சொல்லுகிறேன். என்னை நாடி வரும் இளைஞர்கள் நீங்கள் சந்நியாசத்திற்க்கு வழி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள் நானே ஆசாமி நான் எங்கே போய் சாமியாருக்கு பயிற்சி கொடுப்பது.அவர்களுக்கு நல்ல புத்திமதி சொல்லி அனுப்புகிறேன். 

பிரம்மசாரியாக இருந்து உலக வாழ்வில் இருந்து விடுபடுவது ரொம்ப ரொம்ப கடினமான ஒன்று அதை நான் பல சாமியார்களிடம் இருந்து கற்ற விசயம். எவன் ஒருவன் இல்லற வாழ்வில் ஈடுபட்டு ஆன்மிகத்தில் நுழைகிறானோ அவன் எளிதில் இறைவனை அடைந்துவிடலாம். இந்த விசயம் தெரியாமல் இருக்கிறார்கள் ஆன்மிக அனுபவத்தில் இந்த மேட்டரை சொல்லி அனுப்பிவிடுகிறேன். நல்ல ஆன்மிக வரனாக பார்த்து திருமணத்தை நடத்தி வையுங்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: