Followers

Tuesday, October 9, 2012

திருமணமும் பூர்வபுண்ணியமும் 2



வணக்கம் நண்பர்களே நேற்றைய பதிவில் ஐந்தாவது வீடு செய்யும் பிரச்சினை பார்த்தோம் அதன் தொடர்ச்சி இப்பதிவில் ஐந்தாவது வீட்டில் கெட்டகிரகங்கள் இருந்தால் என்ன செய்யும் என்றால் உங்களுக்கு பணத்தை நிறைய தரும். ஐந்தாம் வீட்டில் கெட்ட கிரகங்கள் இருந்து உங்களுக்கு பணம் தட்டுப்பாடு இல்லாமல் வந்தால் உங்களின் திருமண விசயத்தில் அல்லது குழந்தைகள் விசயத்தில் ஆப்பு அடிக்க போகிறது என்று அர்த்தம். உனக்கு பணத்தை இப்பொழுது கொடுப்பேன் டா அடுத்தது உன் மனநிம்மதிக்கு ஆப்பு அடிப்பேன் டா என்று நேரம் பார்த்துக்கொண்டு இருக்கும்.

அதிலும் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்தால் இந்த பலனை கனகச்சிதமாக செய்வார் அவர் மூன்றாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்த்துவிடுவார் திருமண வாழ்வு அல்லது குழந்தைகளின் விசயத்தில் அருமையாக உங்களை விளையாடிவிடுவார்.இந்த வீட்டைப்பொருத்தவரை எந்த கிரகங்கள் உட்கார்ந்தாலும் பிரச்சினை தான். இதில் ராகு கேது உடகார்ந்தால் பித்ரு தோஷம் என்பார்கள் இதில் எந்த கிரகம் உட்கார்ந்தாலும் முன் ஜென்ம தோஷம் தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றே சொல்லலாம். 

ராகு கேது அமர்ந்தால் எப்படி வேலை செய்யும் என்றால் நீங்கள் ஒரு இண்டர்வியூ செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒவ்வொரு இண்டர்வியூ பாஸ் செய்து கடைசி இண்டர்வியூவில் உங்களை கவிழ்த்து விடுவார் கடைசி நிமிடத்தில் வேலை வாய்ப்பை இழப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கும் இந்த மாதிரி நடந்தால் அது ராகு கேது உங்களை ஐந்தாம் வீட்டில் இருந்து கெடுக்கிறார் என்று அர்த்தம்.

ஐந்தாம் வீட்டை வைத்துதான் நமக்கு குலதெய்வத்தின் அருள் இருக்குமா என்று சொல்லமுடியும் இந்த வீடு கெட்டால் குலதெய்வ அருள் கிடைக்காது எந்த அருளும் கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் என்று சொல்லலாம் அதைப்பற்றி இப்பொழுது நாம் பார்க்க வேண்டாம்.

இந்த ஐந்தாம் வீடு கெட்டால் நீங்கள் என்ன தான் உருண்டு புரண்டாலும் கடவுள் உங்களை பார்க்கவே மாட்டார் என்று தான் சொல்லவேண்டும். பின்பு எப்படி டா முன்னேறுவது என்று கேட்டால் உங்கள் வீட்டில் உள்ளவர்களின் துணையோடு வழிபாட்டை நடத்தவும் அல்லது உங்களின் நண்பர்களுக்கு ஐந்தாவது வீடு நன்றாக இருந்தால் அவர்கள் மூலம் வழிபாட்டை செய்யலாம். நாம சாமி கும்பிடுவதற்க்கு அடுத்தவன் துணை தேவைபடுகிறது என்றால் எவ்வளவு கொடுமை என்று பாருங்கள்.

ஒரு சில குடும்பங்களில் பார்த்தீர்கள் என்றால் பரிகாரம் செய்வதற்க்கு அல்லது கோவில் செல்லுவதற்க்கு சோதிடர்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள் ஏன் என்றால் சோதிடர்களுக்கு கேது அல்லது குரு பலம் நன்றாக இருக்கும் கோவிலில் இருக்கும் சக்தி நன்றாக கிரகத்து அடுத்தவர்களுக்கு கொடுக்கமுடியும் அதனால் சோதிடர்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள். நாங்களும் ஓசியில் ஊரை சுற்றி பார்ப்பதற்க்கு வசதியாக இருக்கும்.

இந்த ஐந்தாவது வீடு கெட்டது என்றால் அந்த ஆசாமி கொலை செய்யக்கூட தயங்கமாட்டான். செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் நீங்கள் அவனின் நட்பை விட்டு விலகி இருப்பது நன்மையளிக்கும். முன்ஜென்மத்தில் செய்த வில்லகத்தின் மீதி இந்த ஜென்மத்தில் இருக்கும் உங்களை கொல்வதற்க்கு கொஞ்சமும் தயங்கமாட்டார்கள். 

நீங்கள் சாதாரண மனிதனாக அடுத்தவரை பார்ப்பதற்க்கும் நீங்கள் சோதிடகாரனாக பார்ப்பதற்க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கிறது. நீங்கள் அனைவரும் சோதிடர்கள் அதனால் ஒரு மனிதனை சோதிட கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். வந்திருப்பவர யார் எதற்காக வந்திருக்கிறார் என்ன இவர் செய்வார் என்று  அடுத்தவரை பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இல்லை சோதிடர்களாகிய நமக்கே ஆப்பு அடித்துவிடுவார்கள். ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் நம்மை காப்பாற்றிக்கொள்வது என்பது முதல் கடமை நமது வேலையே அடுத்தவரைப்பற்றி தெரிந்துக்கொள்வது தானே நாம கோட்டையை விடலாமா அதனால் சொன்னேன் நண்பர்களே. போதுமா பூர்வபுண்ணிய வீட்டை திருமணம் மூலம் பார்த்தது.

பூர்வ புண்ணியத்திற்க்கு என்ன பரிகாரம் செய்தால் நல்லது என்று நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் .

அடுத்த பதிவில் பரிகாரத்தை தருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Rajaram said...

////அதிலும் ஐந்தாம் வீட்டில் சனி அமர்ந்தால் இந்த பலனை கனகச்சிதமாக செய்வார் அவர் மூன்றாம் பார்வையாக ஏழாம் வீட்டை பார்த்துவிடுவார் திருமண வாழ்வு அல்லது குழந்தைகளின் விசயத்தில் அருமையாக உங்களை விளையாடிவிடுவார்.இந்த வீட்டைப்பொருத்தவரை எந்த கிரகங்கள் உட்கார்ந்தாலும் பிரச்சினை தான். இதில் ராகு கேது உடகார்ந்தால் பித்ரு தோஷம் என்பார்கள் இதில் எந்த கிரகம் உட்கார்ந்தாலும் முன் ஜென்ம தோஷம் தான் என்பதில் சந்தேகம் இல்லை என்றே சொல்லலாம். ////

ஐந்தில் ச‌னியிருந்தால் தத்துப்புத்திர‌ யோக‌ம் என்றும் உண்டு,அப்ப‌டியிருப்பின் குழ‌ந்தையின் சுய‌ ஜாத‌க‌ அமைப்பிற்குத் த‌குந்த‌வாறு கோவில்க‌ளில் சென்று எழுதி வைப்ப‌து ந‌ல்ல‌து.இல்லையெனில் ந‌ம்மைக்காலி செய்யும்,அல்ல‌து குழ‌ந்தையைக் காலி செய்துவிடும்.குழந்தையைக் காலி செய்தால் இருந்தயிடத்து வேலையைக் கச்சிதமாகச் செய்துவிட்டது என்று கொள்ளலாம்.இதை ந‌டைமுறையிலும் நான் பார்த்திருக்கிறேன். முடிந்த‌வ‌ரைக் குல‌தெய்வ‌ வ‌ழிபாடும், ராமேஸ்வ‌ரம் சென்று அக்னி தீர்த்த‌க்க‌ட‌லில் நீராடி சாமி த‌ரிச‌ன‌ம் செய்வ‌து ந‌ல்ல‌து.அத‌ற்கு அடுத்த‌ப‌டியெனில் காள‌ஹ‌ஸ்தி செல்ல‌லாம்.தென் த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ராமேஸ்வ‌ரம், வ‌ட‌ த‌மிழ‌க‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு காள‌ஹ‌ஸ்தி. அமாவாசை விர‌த‌ம் இருந்து பித்ருக் க‌ட‌ன் செய்வ‌தும் ந‌ல்ல‌து.

////இந்த ஐந்தாவது வீடு கெட்டது என்றால் அந்த ஆசாமி கொலை செய்யக்கூட தயங்கமாட்டான்.////

ம‌ன‌தைக்குறிக்கும் வீடாக‌ இருப்ப‌தால் அது சுத்த‌மாக‌ இருப்ப‌து உத்த‌ம‌ம்.அவ்வாறு பாவிக‌ள் கூடிவிட்டால் சந்திர‌னாவது(மனோகாரகன்) கெடாம‌ல் இருக்க‌வேண்டும்(வ‌ள‌ர்பிறை சந்திர‌னாக‌ அல்ல‌து பாவிக‌ள் சேர்க்கையின்றி இருப்ப‌து).பாவிகள் வலுத்துவிட்டால் மனம் கெட்டுவிடும் மனிதன் எதற்கும் அஞ்சமாட்டான்.

////செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்தால் நீங்கள் அவனின் நட்பை விட்டு விலகி இருப்பது நன்மையளிக்கும்.////

க‌டின‌மான‌ ஆசாமியாக‌ இருப்பார்க‌ள்,சில‌ரைப்பார்த்துச் சொல்வ‌து போல் கல் நெஞ்ச‌க்கார‌ர்க‌ள்.

Swami said...

ஒரு சந்தேகம். மிதுன லக்னத்துக்கு ஐந்தாம் வீடான துலாத்தில் ,சனி இருந்தால் , பலன் எப்படி? உச்சமடைந்த சனீஸ்வரர்
நல்லது செய்வாரா?