Followers

Thursday, March 7, 2013

ஐந்தில் செவ்வாய் + சனி பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                    செவ்வாய் சனி பூர்வபுண்ணியத்தில் சேர்ந்து அமர்ந்தால் அந்த நபருக்கு தீவிரவாத குணங்கள் அதிகமாக காணப்படும். இவர்கள் எதனை செய்தாலும் அந்த செயல் மூலம் ஒரு நபர் கண்டிப்பாக பாதிக்கப்படுவார். இவர்கள் ஏதோ நன்மை செய்வது போல் நினைத்து அடுத்தவர்களை ஆபத்தில் மாட்டிவிடுவார்கள்.

செவ்வாய் நெருப்பு கிரகம். சனி காற்று கிரகம். நெருப்பும் காற்றும் இணையும்போது எப்படி இருக்குமோ அப்படி தான் பற்றிக்கொண்டு எரியும். இவர்களிடம் அன்பு மட்டும் வைத்துப்பாருங்கள் நீங்கள் அடிப்பட்டு தான் வருவீர்கள். அந்த அடி உங்களின் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.

சனி போதைக்கு உரிய கிரகம். இது ஐந்தில் அமரும்போது மனிதனுக்கு எதாவது ஒரு போதை இருந்துக்கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் உடனே என்னடா அனைவரும் போதையை பயன்படுத்துபவர்களா என்று நினைக்க வேண்டாம். மது மட்டும் போதை கிடையாது எத்தனையோ போதை விசயங்கள் இருக்கின்றன. தாய்பால் கூட மனிதனுக்கு போதை தான் என்று சொல்லிவைத்துள்ளார்கள். சும்மா இருக்கும்போது செல்போனை நோண்டுவது இதுவும் போதை தான். சனி போதையை தருபவர் இவர் ஐந்தில் அமரும் போது எப்படிபட்ட போதையை தருவார். காதல் போதையை தருவார். ஐந்தில் சனி அமரும்போது அந்த நபர்கள் அதிகமாக காதல் வயப்படுவார்கள்.

காதல் செய்கிறார்கள் சரி அவனையோ அல்லது அவளையோ திருமணம் செய்துக்கொண்டு வாழலாம் என்று நினைத்தால் அங்கு தான் விதி செவ்வாய் ரூபத்தில் வரும் எப்படி வரும். செவ்வாய் எதற்கு காரகன் போர்கிரகம். சண்டை என்பது பிரதான தொழில் என்பதால் உடனே துணையோடு சண்டை போட்டு அவர்களை பிரித்துவிடும். அதன் மூலம் வாழ்க்கை முழுவதும் அந்த காயம் உள்ளுக்குள்ளே இருந்துவிடும். வாழ்க்கை என்பது போராட்டமாக தான் அமையும். இரண்டு கிரகங்களும் தன்னுடைய வேலையை கச்சிதமாக செய்துமுடித்துவிடும். 


இதனை நான் உங்களுக்கு சொல்லுவதற்க்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் ஒரு நபரின் வாழ்க்கையில் நடந்ததை சொல்லுகிறேன். அந்த பெண்ணுக்கு விருச்சகத்தில் சனி அமர்ந்திருந்தார். அந்த பெண் அந்த பையனிடம் காதலை சொன்னால் அந்த பையன் ஏற்றுக்கொண்டான். விருச்சிகத்தில் சனி அமர்ந்ததால் என்ன செய்தார் சிறிது காலத்தில் அந்த பையனிடம் சண்டைபோட்டு பிரிந்தார். 

என்ன தான் பையன்கள் சண்டைபோட்டாலும் தன் காதலிக்காக மனமிரங்கி வலிய போய் மீண்டும் பேசிப்பார்ப்பார்கள். 

அந்த பையன் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பியுள்ளான் அதற்கு அந்த பெண் இனிமேல் எனக்கு மெயில் செய்தால் உன்னை போலீஸ்  தேடும் எச்சரிக்கை என்று மெயில் அனுப்பியுள்ளது. இதனை செய்ய வைத்தது யார் சனி காதல் என்ற போதையை தந்தார் அல்லவா. சனி எங்கு அமர்ந்திருக்கிறார் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில். செவ்வாய் காவல்துறைக்கும் காரகம் வகிக்கிறார் அல்லவா. அதனால் போலீஸ் உன்னை தேடும் என்று சொல்லியுள்ளார்.

நான் சொன்னேன் ஏண்டா அவள் தான் உன்னை வெறுக்கிறாளே விட்டு தொலையன்டா என்று சொன்னால் அவன் சொல்லுகிறான் அவள் மேல் கோபம் வரமாட்டேன்கிறது இப்படி செய்து ஏதாவது கோபம் வருகிறதா என்று பார்க்கலாம் என்கிறான். எப்படி பைத்தியம் ஆகிவிட்டான் பாருங்கள். பிளான் யாரு போட்டது சனி செவ்வாய் ஆச்சே பாதிப்பு எப்படி இருக்கும் இப்படி பைத்திய நிலைமைக்கு தான் தள்ளும்.

எப்படி எல்லாம் கிரகங்கள் வேலை செய்கிறது என்று பாருங்கள். இனி நான் எழுதுவது உண்மைசம்பவங்களை வைத்து தான் எழுதபோகிறேன். படியுங்கள் சுவாராசியமாக இருக்கும். 

காதலையும் சோதிடத்தை சேர்த்து ஒரு தொடர் ஆரம்பியுங்கள் என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அவர்களின் விருப்பத்தையும் கூடியவிரைவில் தீர்ப்போம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: