Followers

Friday, March 8, 2013

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே !
                      என்னிடம் நண்பர் கிருஷ்ணா கேள்வி கேட்டுருந்தார் அவரின் சந்தேகத்திற்க்கு பதில் அளித்துள்ளேன். படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். சிகப்பு நிறத்தில் இருப்பது அவரின் கேள்வி.

தன் கட்ட தானே அவுதுக்க தெரியாத குல தெய்வம் நமக்கு என்ன பெரியதாக உதவி செய்ய முடியும் சுப்பு ?

சரி அமெரிக்கர்கள் எந்த குல தேவதையை வழி படுகிறார்கள் ? சரி UK காரன் எந்த குல தேவதையை வழி படுகிறான் ? இவர்கள் எல்லாம் ஒரு 200 வருடமாக வளமாகதானே இருக்கிரார்கள்...........நாம் தான் குல தெய்வம் இல்லை என்றால் என்று பயம் காட்டி கொண்டு இருக்கிறோம்...... சரி தானே :)


வணக்கம் நண்பரே நல்ல அறிவுபூர்வமாக கேள்வியை கேட்டுருக்கிறீர்கள். உங்கள் மூலம் பல நண்பர்களுக்கு இது பயன்படும் என்பதால் பதிவாக போடுகிறேன். எனக்கும் ஒரு பதிவு போட்டுவிட்டேன் என்ற சந்தோஷம் கிடைக்கும்.

தன் கட்ட தானே அவுதுக்க தெரியாத குல தெய்வம் நமக்கு என்ன பெரியதாக உதவி செய்ய முடியும் 

மிகப்பெரிய அறுவைசிகிச்சை நிபுணர் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அவர் ஒரு லட்சம் பேருக்கு அறுவைசிகிச்சை செய்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்தாலும் அவருக்கு உடல்நிலையில் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றால் அடுத்த டாக்டர் தான் செய்ய வேண்டும். அவரே செய்துக்கொள்ளமுடியாது.

சரி அமெரிக்கர்கள் எந்த குல தேவதையை வழி படுகிறார்கள் ? சரி UK காரன் எந்த குல தேவதையை வழி படுகிறான் ? இவர்கள் எல்லாம் ஒரு 200 வருடமாக வளமாகதானே இருக்கிரார்கள்...........

நீங்கள் செல்லுவதை ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் வாரம்தோறும் ஞாயிறு அன்று சர்ச் சென்று பிராத்தனை செய்கிறார்கள். நம்ம ஆட்கள் வருடத்திற்க்கு ஒரு முறை செல்லுங்கள் உங்கள் குலதெய்வம் உங்களை காக்கும் என்றாலும் எனக்கு அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்னால் செல்லமுடியவில்லை என்று சொல்லுவார்கள். இப்படி இருந்தால் எப்படி இவர்கள் முன்னேற்றம் இருக்கும். அவர்கள் ஞாயிறு அன்று விடுமுறை அளித்ததே சர்ச்க்கு செல்ல தான். அவர்கள் கோவிலுக்கு செல்ல நீங்களும் ஒய்வு எடுத்துக்கொண்டு ஞாயிறு விடுமுறை கொடுத்தானே அவன் புண்ணியவான் என்று அவனுக்கு புண்ணியத்தை சேர்க்கிறீர்கள். உண்மையை சொல்லபோனால் அவர்கள் நன்றாக இருப்பதற்க்கு நீங்களும் காரணமாக இருக்கிறீர்கள்.


ஒரு உண்மையை சொல்லுகிறேன் முஸ்லீம் கடவுளை வணங்கும்போது என்ன செய்வார்கள் இரண்டு கையையும் நன்றாக விரித்து இந்த உலகத்தில் உள்ள அனைவருக்கும் நிறைய கொடு இறைவனே அத்துடன் என்னுக்கும் நிறைய கொடு என்று வணங்குவார்கள். கிருஸ்த்துவர்கள் கையை கொஞ்சம்மாக விரித்து உலகத்தில் உள்ளவர்களுக்கு இவ்வளவு போதும் அதையே எனக்கு கொடு என்று வணங்குவார்கள். இதில நம்ம ஆளு இருக்கிறார்களே கையை இரண்டும் ஒட்டிவைத்துக்கொண்டு உலகத்தில் உள்ள அனைத்தையும் எனக்கே கொடு என்று சுயநலமாக இறைவனிடம் கேட்பார்கள். எப்படி இவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

மேலும் ஒரு உண்மையை உங்களிடம் ரகசியமாக சொல்லுகிறேன் பகவானே கேட்டுக்கொள்ளுங்கள். முஸ்லீம் மக்கள் பணக்காரர்கள் ஆனதற்க்கு என்ன காரணம் என்றால் வெள்ளிக்கிழமை அன்று இறைவனை வணங்குவார்கள். வெள்ளி சுக்கிரனுக்கு உரிய நாள் பணத்தை அள்ளி கொட்டும். இன்று முஸ்லீம் மக்கள் உலக பணக்காரர்களாக இருப்பதற்க்கு அது தான் காரணம். ஞாயிறு அன்று கிருஸ்த்துவர்கள் வணங்குகிறார்கள் உலகம் முழுவதும் சூரியன் வியாபித்து இருக்கிறான். அது போல் அவர்கள் மதம் இன்று உலகம் முழுவதும் பரவிவருகிறது. நம்ம ஆட்கள் அனைத்தையும் கண்டுபிடித்துவிட்டு என்றைக்கு வணங்குவது என்று தெரியாமல் இருக்கிறார்கள் இவர்கள் எப்படி முன்னேற்றம் அடைவது. 

என்ன கிருஷ்ணரே நான் சொல்லுவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவர்களே திருத்தவேண்டியவன் நீ(கிருஷ்ணர்). நீ என்னடா என்றால் என்னிடம் வந்து பாடம் படிக்கிறாய். உலக்கே பாடம் சொன்னவன் நீ உலகமாக கேடி வரிசையில் உன்னை சேர்க்க வேண்டும். நீ செய்ததை பார்த்தாய் என்றால் அனைத்தும் கேடி வேலையாக தான் இருக்கும். நீயே ஒரு சாதாரணமான ஆளிடம் பாடம் படிக்கிறாய் என்றால் அப்ப நான் எவ்வளவு பெரிய கேடி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.



2 comments:

KJ said...

nice info sir. Thanks.

தனி காட்டு ராஜா said...

///////////என்ன கிருஷ்ணரே நான் சொல்லுவது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். இவர்களே திருத்தவேண்டியவன் நீ(கிருஷ்ணர்). நீ என்னடா என்றால் என்னிடம் வந்து பாடம் படிக்கிறாய். உலக்கே பாடம் சொன்னவன் நீ உலகமாக கேடி வரிசையில் உன்னை சேர்க்க வேண்டும். நீ செய்ததை பார்த்தாய் என்றால் அனைத்தும் கேடி வேலையாக தான் இருக்கும். நீயே ஒரு சாதாரணமான ஆளிடம் பாடம் படிக்கிறாய் என்றால் அப்ப நான் எவ்வளவு பெரிய கேடி.///////////

என்ன சுப்பு செய்வது ....இனம் இனத்தோடு தானே சேரும் :)