Followers

Saturday, March 30, 2013

தனுசு: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     தனுசு ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

தனுசு ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது மேஷம் அதன் அதிபதி செவ்வாய்.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்கள் வேலையாட்கள்.

அடையாளம்?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறம். பிற மொழிகளை நன்கு பேசியிருப்பார். இவரின் வீடு வடமேற்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறம்போல் இருந்திருப்பார். மலையாள மொழி பேசியிருப்பார். இவரின் வீடு தென்கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருந்திருப்பார். இவர் சமஸ்கிரத மொழி பேசியிருப்பார். இவரின் வீடு கிழக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கைகளை துண்டித்து அதனால் ரத்தகாயம் ஏற்படுத்தி கொன்றுருக்ககூடும்.

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

மர்ம ஸ்தானங்களில் தாக்கி உயிரை எடுத்து இருப்பார்கள்.

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

தலையில் தாக்கி அதன் மூலம் இரத்தம் வெளிவந்து கொல்லப்பட்டுருக்கலாம்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மேஷ ராசி அசுவினி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடமேற்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு தென்கிழக்கு மற்றும் மேற்கு திசையில் இருக்கும். 

மேஷ ராசி கார்த்திகை 1 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு கிழக்கு  அல்லது மேற்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

பரிகாரம்

செவ்வாய்கிழமை மற்றும் சனிகிழமை சிவனை வணங்கி வாருங்கள். உங்களை தேடி அந்த நபர் வருவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: