Followers

Thursday, March 14, 2013

ஆன்மிக பயிற்சி முன்னோட்டம்


வணக்கம் நண்பர்களே !
                    இந்த பதிவு திருப்பூரில் இருந்து எழுதிக்கொண்டு இருக்கிறேன். நமது ஜாதககதம்பம் வழியாக என்னிடம் ஆன்மிகபயிற்சி பெறுபவர்களை நேற்றும் இன்றும் சந்தித்தேன். இப்பொழுது அவர்கள் நல்ல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள். இதனைப்பற்றி நான் வெளியில் சொல்லவில்லை அவர்கள் அனைவரும் இந்த தளம் வழியாக வந்தவர்கள். 

ஜாதககதம்பம் படிப்பவர்களுக்கு என்னால் முடிந்த ஆன்மீகபயிற்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துவந்தது. அதனை மறைமுகமாக செயல்படுத்தி வந்தேன். அவர்கள் நல்லமுன்னேற்றத்தை அடைந்துவிட்டார்கள் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார்கள். நீங்கள் பூர்வபுண்ணியத்தைப்பற்றி படித்துவருகிறீர்கள் அதன் வழியாக உங்களுடன் சம்பந்தப்பட்ட நபரை கண்டுக்கொள்வதற்க்கு சிரமப்பட்டு வந்திருப்பீர்கள் அதனை போக்கவும் இந்த மாதிரி பயிற்சிகள் தேவை.

ஜாதககதம்பம் உங்களுக்கு தேவையான அனைத்து ஆன்மீகபயிற்சியையும் வழங்கபோகிறது. தமிழகத்தில் இருக்கும் அனைத்து நகரங்களிலும் இந்தபயிற்சியை தருவதற்க்கு ஏற்பாடு நடைபெற்றுவருகிறது. இந்த பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக தான் அனைவருக்கும் நடத்தவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கிறது. நமது தளத்தின் வழியாக அறிமுகமான நண்பர்கள் இதற்க்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன் என்று சொல்லியுள்ளார்கள்.

நேற்று கோயம்புத்தூர் சென்று இருந்தேன் இதனைப்பற்றி சில நண்பர்களிடம் நேரிடையாக பேசும்போது அவர்கள் கொடுத்த உற்சாகத்தால் தான் இதனை வெளியில் அனைவருக்கும் உடனடியாக கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒவ்வொரு பயிற்சியும் அதிக சக்தியுடன் அதே நேரத்தில் நேரிடையாக உங்களுக்கு வித்தியாசமான ஆன்மீக அனுபவம் ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் ஏற்பாடு செய்துக்கொண்டு இருக்கிறேன்.

ஆன்மீக பயிற்சியைப்பற்றி தங்களின் கருத்தை தாருங்கள்.தொடர்புக்கு 9551155800.


நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: