Followers

Tuesday, March 26, 2013

பூர்வ புண்ணியம் 47



வணக்கம் நண்பர்களே!
                     பூர்வபுண்ணிய ஞாபகம் வருவதற்க்கு கூட ஜாதகத்தில் வழி இருந்தால் தான் நடைபெறும். அப்படி இல்லை என்றால் ஒரு சில நேரத்தில் வரும் அதன் பிறகு அதனை மறந்துவிடுவோம்.

ஒருவருக்கு ஐந்தாவது வீட்டு தசா நடைபெற்றால் கண்டிப்பாக உங்களின் முன்ஜென்மத்தில் உள்ள நபர்கள் உங்கள் முன் வந்து நிற்பார்கள். நீங்கள் தேடிபோகவேண்டியதில்லை சம்பந்தப்பட்ட நபரும் உங்களையும் கடவுள் சந்திக்க வைத்துவிடுவார்.அப்பொழுது நான் சொல்வது சரிதான் என்று உங்களின் மனதிற்க்கு தெரியும். 

ஐந்தாவது வீட்டில் அமரும் கிரகம் மற்றும் ஐந்தாவது வீட்டில் பார்வை வைக்கும் கிரகம் ஐந்தாவது வீட்டு அதிபரின் தசாவிலும் நீங்கள் கண்டிப்பாக அந்த நபரை நீங்கள் சந்திக்கலாம்.

ஐந்தாவது வீட்டு தசா நடைபெறாதவர்கள். ஒவ்வொரு தசாவிலும் புத்தி அல்லது அந்தரகத்தில் அவரின் நினைப்பு வரும். அவர் நேரில் வருவதற்க்கு வாய்ப்பு அதிகம். நீங்கள் தேடுவது கூட ஐந்தாவது வீட்டு தசா மற்றும் புத்தி அந்தரங்கத்தில் தேடும் போது உடனே நீங்கள் அந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

நீங்களே உங்களை பரிசோதனை செய்துக்கொள்ள கூட இது எளியவழி உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அதில் ஐந்தாவது வீட்டு தசா மற்றும் புத்திகளில் உங்களின் ஆத்மா உங்களை அறியாமலேயே ஏதோ ஒன்றை தேடுவதை நீங்களே பார்க்கலாம். அப்படி அந்த ஆத்மா தேடும்போது உங்களுக்கு எந்த வேலையில் ஈடுபட்டாலும் உங்களால் அதில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் டைரி எழுதிக்கொண்டு வாருங்கள். அப்படி எழுதும் போது உங்களின் எண்ணங்களையும் அதில் எழுதிவையுங்கள் பிறகு உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களின் டைரியில் உள்ள எண்ணங்களை எடுத்துக்கொண்டு ஐந்தாவது வீட்டு தசா அல்லது புத்தியின் காலகட்டத்தில் ஒரு தேடுதல் இருந்தை உங்களின் டைரியில் உள்ள எண்ணங்கள் பிரதிபலிக்கும்.

அனைத்தையும் நாம் சோதனை செய்துப்பார்த்தால் தான் ஆன்மீகத்தில் முன்னேற்றம் என்பதை காணமுடியும். உங்களை சோதனை செய்யும்போது பலவித நிகழ்வுகள் உங்களை சுற்றி நிகழ்வதை நீங்கள் பார்க்கலாம்.உங்களை அறிந்த பிறகு தான் முன்ஜென்ம வினைகளை முறியடிக்கமுடியும்.


திருமந்திரத்தில் ஒரு பாடல் உள்ளது. இப்பொழுது சினிமா பாடல்களில் ஹிட் பாடல் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அது போல திருமந்திரத்தில் ஒரு ஹிட் பாடல் உள்ளது. திருமந்திரம் படித்தவர்கள் அனைவருக்கும் இது ஹிட் பாடல் என்று தெரியும். அதனை உங்களுக்கு சொல்லுகிறேன். திருமந்திரத்தில் 2611 பாடல் இது.

"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்

பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்

சென்னியில் வைத்த சிவனரு ளாலன்றே" 

தன்னை அறிந்தபிறகு தான் அனைத்து ஆன்மீகமும் உங்களுக்கு நடைபெறும்.மனிதபிறவி என்ன என்பது அப்பொழுது மட்டுமே தெரியவரும். பூர்வபுண்ணியம் என்ன என்று அப்பொழுது தான் தெரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: