Followers

Saturday, March 9, 2013

பூர்வ புண்ணியம் 42



வணக்கம் நண்பர்களே!
                     பூர்வபுண்ணியப்பகுதியில் முன்ஜென்மத்தில் நீங்கள் பிறர்க்கு கெடுதல் செய்திருப்பீர்கள் அந்த சம்பந்தப்பட்டவரை தேடுங்கள் என்று நான் பதிவுகளை தந்துக்கொண்டிருந்தேன். இடையில் கொஞ்சம் இடைவெளி கொஞ்சம் விட்டதால் பல நண்பர்கள் அதனைப்பற்றி மறந்துவிட்டார்கள் தொடர்ந்து பார்க்கலாம்.

உங்களின் பூர்வபுண்ணியத்தில் உங்களோடு சம்பந்தப்பட்டவர்களை நீங்கள் வாழ்வில் ஒருமுறை சந்திக்கும்போது உங்களுக்குள் ஏதோ ஒன்று நடைபெறும். உங்களின் உடலில் பல மாற்றங்களை சந்திக்கலாம். ஏதோ ஒரு தவிப்பு ஒன்று இருப்பதை முதன் முதலாக உணரலாம். இதனை நான் உணர்ந்ததால் உங்களுக்கு சொல்லுகிறேன்.

நான் என்னுடைய முன்ஜென்மத்தில் சம்பந்தப்பட்டவரை சந்தித்து இருக்கிறேன். அவர் என்னை வந்து சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார். எனக்கு நன்றாக தெரியும் இவர் யார் என்று நான் காட்டிக்கொள்ளவில்லை. இருவரும் பேசி கொண்டு  ஆனால் நான் காட்டிக்கொள்ளவில்லை சம்பந்தப்பட்ட நபரை நான் ஏர்ப்போர்டில் கொண்டு விட்டுவருவதற்க்கு ஆட்டோவில் இருவரும் செல்கிறோம். 

அப்பொழுது அந்த நபருக்கு உடலில் பலவித மாற்றம் ஏற்படுகிறது. உள்ளுக்குள் தவிப்பு இருப்பதை நான் உணர்ந்தேன். அதே தவிப்பு என்னிடமும் இருந்தது. பிறகு இரண்டு வாரத்திற்க்கு பிறகு தான் இந்த விசயமே அவருக்கு தெரிந்தது. இந்த சம்பவத்தில் பல சுவாராசியமான தகவல் எல்லாம் இருக்கிறது அதனை நான் பொறுமையாக சொல்லுகிறேன். 

நீங்கள் ஒருவரை சந்திக்கும்போது இப்படிபட்ட உணர்வுகள் ஏற்பட்டால் அவர் தான் உங்களின் முன்ஜென்மத்தில் தொடர்பு உடையவர். அவரை நன்றாக பிடித்துக்கொள்ளுங்கள். இதனை எல்லாம் உங்களிடம் ஏன் சொல்லுகிறேன் என்றால் உங்களின் வாழ்க்கையில் ஒரு பூர்த்தி ஏற்படவேண்டும் என்றால் இந்த நபர்களை நீங்கள் தேடி கண்டுபிடியுங்கள்.

நன்றி நண்பர்களே

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Unknown said...

avargalai kandupidithu enna seiyavendum.avargalukku enna seiyavendum.

rajeshsubbu said...

வணக்கம் தொடரை முழுமையாக படியுங்கள். உங்களுக்கு அதனைப்பற்றி தெரியவரும். நன்றி