Followers

Friday, March 29, 2013

விருச்சிகம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     விருச்சிக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

விருச்சிக ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது மீனம் அதன் அதிபதி குரு.

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

சகோதரர்கள் வேலையாட்கள் மற்றும் வேதங்களை ஒதுபவர்கள்

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் பொன்நிறமாக மின்னுவார். தாய்மொழி மட்டும் பேசியிருப்பார். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் கருப்பு நிறமாக இருப்பார். அந்நிய மொழி பேசியிருப்பார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார். தாய்மொழி பேசியிருப்பார். இவரின் வீடு வடக்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயத்தில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கொன்றுருக்ககூடும்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்களில் காயத்தை ஏற்படுத்திக்கொன்றுருக்ககூடும்.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

கழுத்து பகுதியில் காயப்படுத்தி கொன்றுருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

மீன ராசி பூரட்டாதி 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால் 

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடக்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

குருவின் வீட்டில் இருவரும் அமர்வதால் கோவில் காரியங்களில் அதிக ஈடுபாடு கொடுத்தவர்களை நீங்கள் முன்ஜென்மத்தில் பிரச்சினை கொடுத்திருப்பீர்கள். இந்த ஜென்மத்தில் இவ்வாறு ஈடுபாடு உடையவர்களை காணும் போது அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்துவாருங்கள்.

பரிகாரம்

திருசெந்தூர் முருகனை வணங்கி வாருங்கள் உங்களுக்கு வழி காட்டுவார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: