Followers

Tuesday, March 26, 2013

கடகம்: ஐந்தில் செவ்வாய்+சனி



வணக்கம் நண்பர்களே!
                     கடக ராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தில் செவ்வாய் சனி சேர்ந்து நின்றால் முன் ஜென்மத்தில் எப்படிபட்ட பாவத்தை செய்திருப்பார்கள் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

கடக ராசிக்கு ஐந்தாவது ராசியாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய்.

உங்களால் பாதிக்கப்பட்ட நபர்?

சகோதர்கள் மற்றும் வேலையாட்கள்.

அடையாளம்?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். நடுத்தர உயரமாக இருப்பார். தாய்மொழி மற்றும் மலையாளம் பேச தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் கருப்பாக இருப்பார்.குள்ளமானவராக இருப்பார். அந்நிய மொழி பேசுவார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார்.உயரமானவராக இருந்திருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.

எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

இதயத்தில் வெட்டுப்பட்டு இறந்திருக்ககூடும்.

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கால்களில் வெட்டப்பட்டு கொன்றுருக்ககூடும்.

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு உயிர் போயிருக்கும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு  மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் மற்றும் சனி அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து இவரின் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருக்கும். 

மேலும் விளக்கம்

சனி கிரகம் செவ்வாய் கிரகமும் ஒரு ஜாதகத்தில் இணையும்போதோ அல்லது ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்ளும்போது அதிக பிரச்சினையை அந்த ஜாதகருக்கு கொடுக்கும். சனி பஞ்சபூதத்தில் காற்று கிரகம் செவ்வாய் நெருப்பு கிரகம் இரண்டும் பூர்வ புண்ணியத்தில் இணையும்போது அதிகமான சிக்கலை ஏற்படுத்தும்.

செவ்வாயின் வீட்டிலேயே சனி அமரும் போது இருவருக்கும் யுத்தம் அதிகமாக தான் இருக்கும். அதன் பாதிப்பை அதிகமாக சம்பந்தப்பட்ட நபர் அனுபவிக்கவேண்டும். நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்களால் பிறரின் வாழ்க்கையை கெடுக்கும் வாய்ப்பு இருப்பதால் எந்த விசயத்திலும் நிதானமாக முடிவு எடுக்கவேண்டியது அவசியம்.

பரிகாரம்

செவ்வாய் பகவானையும் சனி பகவானையும் வணங்கி வாருங்கள். சம்பந்தப்பட்ட நபரை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: