Followers

Thursday, August 1, 2019

இனிய தொடக்கம்


வணக்கம்!
          தெளிவான சிந்தனையோடு செயல்படவைப்பது ஆன்மீகத்தின் முக்கியபங்கு. மற்றவர்களை விட ஆன்மீகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெரிய சிக்கல்களை மாட்டிவிடமால் அவர்களை தெளிவாக வைக்கும்.

நீங்கள் சரியானவர்களாக இல்லாமல் ஏதோ போகின்ற போக்கில் போகட்டும் என்று இருந்தால் நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதற்க்கே லாயக்கற்றவர்கள் என்று அர்த்தம்.  ஆன்மீகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை விட அதிகமான சிந்தனையில் இருப்பவர்கள் என்பதால் தெளிவாக இருங்கள் என்று சொல்லுகிறேன்.

பலர் பெரிய சிக்கல்களில் சிக்கி தவிப்பதற்க்கு காரணமாக இருப்பது எல்லாம் அவர் அவர்கள் தெளிவான முடிவுகளை எடுக்காமல் இருப்பதால் தான் ஏற்படுகின்றது. தெளிவான முடிவுகளை எடுக்க குரு கிரகம் நன்றாக செயல்படவேண்டும்.

ஒரு ஆன்மீகவாதி என்றாலே அவர்க்கு கண்டிப்பாக குரு கிரகம் நன்றாக செயல்படும். குரு கிரகம் நன்றாக செயல்படும்பொழுது அவரால் சிறப்பான ஒரு முடிவை எடுப்பார்கள். சிக்கலில் இருந்து வெளியில் வருவதற்க்கு குரு கிரகம் வேலை செய்யவேண்டும்.

உங்களின் கடந்தகால தவறுகளை எடுத்து பார்த்தால் குரு கிரகம் சரியில்லாத நேரத்தில் எடுத்த முடிவுகளால் தான் பெரும்பாலும் இருக்கும். மற்ற கிரகங்களின் பலன் அதிகமாக இருக்கும்பொழுது முடிவுகள் சரியாக இருக்காது. முடிந்தவரை நாம் நன்றாக சிந்தித்து செயல்படுகிறோமா என்பதை பார்த்துக்கொண்டே இருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: