Followers

Friday, January 3, 2020

சிறப்பு கட்டண பதிவு 5

வணக்கம்!
         ஒரு மனிதனுக்கு மனமகிழ்ச்சி என்பது தொடர்ச்சியாக இருந்துவிடுவதில்லை ஒரு சிலருக்கு ஒரு ஐந்து நிமிடம் இருக்கும் ஒரு சிலருக்கு ஒரு நாள் முழுவதும் இருக்கும் ஒரு சிலருக்கு ஒரு வாரம் முழுவதும் இருக்கும் அடுத்ததாக கவலை பற்றிக்கொள்ளும். மகிழ்ச்சியை தானே மனிதன் விரும்புவான் கவலையை மனிதன் விரும்புவதில்லை இது எதனால் நடைபெறுகின்றது என்றால் இதற்க்கும் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

உங்களின் புண்ணிய கணக்கில் நல்லது இருந்து அது இந்த ஜென்மத்தில் கொடுத்தால் உங்களின் வாழ்க்கையில் அதிகபட்ச மகிழ்ச்சியை நீங்கள் அனுபவிக்கமுடியும். மகிழ்ச்சிக்கும் புண்ணியத்திற்க்கும் அதிக சம்பந்தம் இருக்கின்றது. நீங்கள் தொடர்ச்சியாக மகிழ்ச்சியையும் அனுபவிக்கமுடியாது அதன் பிறகு உங்களுக்கு சோகம் வந்துவிடும்.

நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றீர்கள் என்றால் உங்களின் புண்ணியகணக்கில் உள்ள மகிழ்ச்சி செலவு செய்துக்கொண்டு இருக்கின்றது அர்த்தம். அது எவ்வளவு தான் உங்களுக்கு கொடுக்கும் விரைவில் தீர்ந்துவிடபோகின்றது என்று அர்த்தத்தில் அதனை எடுத்துக்கொள்ளவேண்டும். புண்ணியத்தை அதிகரிக்கும் செயலில் ஈடுபடவேண்டும்.



நான் நல்ல வசதி வாய்ப்போடு இருக்கின்றேன். எனக்கு பணவசதி அதிகமாக இருக்கின்றது எனக்கு புண்ணியத்தைப்பற்றி எல்லாம் கவலைப்படதேவையில்லை என்று சொல்லுபவர்களாக இருந்தாலும் எப்பேர்ப்பட்ட  பணக்கார்ரகளுக்கும் மனது மகிழ்ச்சியோடு இருப்பதில்லை ஏதோ ஒரு கவலை அவர்களை தொற்றிக்கொள்ளும் அது வெளியில் தெரியாது.

சோதிடத்தில் உள்ள கிரகங்கள் உங்களின் மனதை ஆட்கொண்டு அது மகிழ்ச்சியையும் கவலையும் தருகின்றது என்று சொல்லுவார்கள். கிரகங்கள் உங்களின் முன்ஜென்மம் மற்றும் இந்த ஜென்மத்தில் உள்ள செயலை வைத்து அது கொடுக்கின்றது என்று சொல்லுவார். இது ஒரு புறம் உண்மை என்று எடுத்துக்கொள்ளலாம். 

ஒரு ஆன்மீகவாதி என்பவன் இதனை கடந்து போய்விடவேண்டும் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். எவ்வளவு பெரிய மகிழ்ச்சி வந்தாலும் ஆடாமல் மற்றும் எவ்வளவு பெரிய கவலை வந்தாலும் சோர்ந்து போகாமல் இருப்பார்கள். இவர்களின் மனநிலையை அந்த நிலைக்கு எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆன்மீகவாதிகள் என்பவர்கள் பெரும்பாலும் கிரகங்களின் தாக்குதலுக்குள் ஆட்படுவதில்லை.

ஆன்மீகவாதியாக எல்லாம் வேண்டியில்லை சாதாரணமான மனிதன் மகிழ்ச்சியாக இநருக்கவேண்டும் அது போதும் அதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்பவர்களாக இருந்தால் அதற்க்கும் வழி இருக்கின்றது அதனைப்பற்றி நமது கட்டணபதிவில் நிறைய பார்க்கலாம்.

கட்டணபதிவை தொடங்கும் காலம் வந்துவிட்டது உடனே கட்டணத்தை செலுத்திவிடுங்கள். நிறைய பதிவுகள் மற்றும் முன்னேற்றத்திற்க்கு உள்ள விசயங்கள் நிறைய அதில் எழுதி இருக்கிறேன். உடனே விரைந்து கட்டணத்தை செலுத்தி வையுங்கள்.

இன்று நவஅம்மன் யாகம் நடைபெற இருக்கின்றது. நவஅம்மன் யாகத்திற்க்கு காணிக்கை செலுத்தி இருப்பவர் நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: