Followers

Thursday, January 16, 2020

நன்றி


வணக்கம்!
          முன்னோர்களுக்கு படையல் என்ற பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் இன்று அவர்களின் முன்னோர்களுக்கு செய்யவேண்டிய படையலை செய்து வழிப்பட்டனர். நமது பதிவை படித்துவிட்டு முன்னோர்களுக்கு செய்தமைக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல நண்பர்கள் இன்று மாலை நேரத்தில் எனக்கு போன் செய்து சந்தேகத்தை கேட்டுக்கொண்டு அதன்படி அவர்களின் பூஜையை செய்தமையால் எனக்கு தகவல் கிடைத்தது. குறைந்தது பத்து நபர்களாவது என்னை தொடர்புக்கொண்டு கேட்டு செய்தனர். நானும் இதனை செய்துவிட்டு தான் இந்த பதிவை தருகிறேன். 

மாட்டுப்பொங்கல் என்றாலே அது பெருமாளுக்குரியது. பெருமாளின் நாளில் நாம் முன்னோர்களுக்கு செய்வது அவர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கும். அவர்களின் ஆத்மா பயணத்திற்க்கு இது ஒரு நல்ல உதவியாக இருக்கும். அவர்களும் நமக்கு நல்ல ஆசியை வழங்குவார்கள். நான் சொன்ன மாதிரியே நமக்கு தெரிந்த வழிபாட்டை நாம் செய்யும்பொழுது நமக்குள் ஒரு திருப்தி கிடைக்கும். பிறரை வைத்து நீங்கள் ஹோமம் மற்றும் சடங்குகளை எல்லாம் செய்வதை விட நீங்களே செய்யும்பொழுது மிகுந்த பலனை அது கொடுக்கின்றது.

நாம் ஊர் ஊராக கோவில் குளங்களுக்கு சுற்றுவதை விட நாமே நமக்கு தெரிந்த இந்த வழிபாட்டை செய்யலாம். இன்று செய்தவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் இதனை விட்டால் அடுத்த வருடம் தான் செய்ய முடியும் என்பதால் அடுத்த வருடம் விழிப்போடு செயல்பட்டு நீங்கள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பலர் வெளியூர்களில் இருப்பதால் என்னால் செய்யமுடியாது என்றும் சொல்லிருந்தனர். பலர் வெளியூர் சென்று சுற்றுலாவில் இருப்பதால் இதனை செய்யமுடியாது என்றனர். பரவாயில்லை அடுத்த வருடம் செய்துக்கொள்ளலாம். உங்களின் முன்னோர்களுக்கு என்னால் ஒரு எளிய சடங்குகளை செய்ய கொடுத்த காரணத்தால் எனக்கும் ஒரு நல்ல ஆசி கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: