Followers

Tuesday, January 7, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஒருவருக்கு இரண்டாவது சுற்று ஏழரைச்சனி நடைபெறும்பொழுது அவர்க்கு பெரும்பாலும் ஆட்டி படைத்துவிடும். ஏழரைச்சனி என்றாலே பயம் இருக்கும். இரண்டாவது சுற்று சுற்றும்பொழுது அதனை பொங்கு சனி என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்று சொல்லுவார்கள் அதிர்ஷ்டம் அடிக்குதோ இல்லையோ அவர்களுக்கு நிறைய வைத்து செய்துவிடும்.

ஏழரைச்சனி இரண்டாவது சுற்று நடைபெறும் காலத்தில் அவர்களை பார்த்து ஊரே சிரிக்கும்படி அமைந்துவிடுவது உண்டு. இவர்கள் நல்லது செய்தாலும் கூட இவர்களை ஊர் பார்த்து சிரிக்கும்படி அமைந்துவிடும். சிலருக்கு ஏதோ பொதுவிசயத்தில் ஈடுபட்டு அவர்கள் அசிங்கப்பட நேரிடும். தற்பொழுது ஊராட்சியில் தேர்தல் நடந்து அல்லவா இதில் தோற்றவர்களுக்கு பெரும்பாலும் ஏழரைச்சனி நடந்து இருக்கும். 

தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை கையில் இருந்த காசு எல்லாம் போய்விட்டு அதனால் கவலையில் இருப்பவர்களும் இருக்கின்றனர். வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருந்து கடைசியில் அது தோல்வியை கொடுத்தது அவர்களுக்கு நடைபெறும் ஏழரைச்சனி என்றால் அது பொய் என்று சொல்லமுடியாது. பலரை இதில் காவு வாங்கியிருக்கின்றது.

ஏழரைச்சனி காலத்தில் பெரும்பாலும் நோயை கொடுக்கும் விதத்தில் செயல்படுகின்றது. ஏழரைச்சனி காலத்தில் தான் உடலில் பல விதமான நோய்கள் எல்லாம் தோன்றுகின்றன. உடலுக்குள் எந்த வித தொந்தரவும் இல்லாமல் இருந்த மனிதன் ஏழரைச்சனி காலத்தில் உடலுக்குள் பிரச்சினை வருவதை கண்டுக்கொள்ளமுடியும். ஏழரைச்சனி இரண்டாவது சுற்று பெரும்பாலும் உடலுக்குள் பிரச்சினையை கொடுக்கின்றது.

ஏழரைச்சனிக்கு என்ன தான் பரிகாரம் என்று கேட்கலாம். இந்த உலகத்தில் நீங்கள் தனிமையானவர்கள் என்பதை காட்டக்கூடிய காலம் என்பதால் உணர்ந்துகூடிய ஒரு வாய்ப்பு உருவாகும். உங்களை சுற்றி இருக்கும் அனைத்தும் போலியானவை என்பதை காட்டக்கூடிய நேரம் அதனால் தனிமையில் இருக்க கற்றுக்கொள்ளுங்கள். தனிமையில் இருப்பது தான் சிறப்பான ஒன்று என்று இருங்கள். நிறைய சிவலாயங்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: