Followers

Monday, January 13, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          உடல் எந்த வித தவறும் செய்யவில்லை என்றாலும் மனதால் செய்யும் தவறுக்கு உடலும் சேர்ந்து கஷ்டப்படுகின்றது. இன்றைய காலத்தில் உடலால் செய்யப்படும் தவறுகள் குறைவாகவே இருக்கும் ஆனால் மனதால் செய்யப்படும் தவறால் உடலுக்கு அதிகபாதிப்பை தந்துவிடுவதும் உண்டு.

ஏழரைச்சனி என்றாலே இதுவரை இந்த ஜென்மத்தில் நாம் செய்த தவறுக்கு ஏழரைச்சனியின் காலத்தில் நாம்  துன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்ற ஒரு காலம் போலவே செயல்படும். பலருக்கு ஏழரைசனியின் காலத்தில் தான் உடலுக்கு நுடத்தை கொடுக்ககூடிய ஒரு செயல் நடைபெறும். கை காலில் அடிப்பட்டு அதனால் உடல் துன்படுவது போலவே செய்யும். உடல் துன்பப்பட்டால் மனதும் துன்படும் அல்லவா அதனால் இதனை செய்துவிடுவதும் உண்டு.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒரு சிலருக்கு பெரிய அடி இல்லாவிட்டாலும் ஒரு சுளுக்கு ஏற்பட்டு அதிக வலியை கொடுப்பது போன்ற ஒரு விசயம் அனைவருக்கும் நடைபெறும். சுளுக்கு ஏற்பட்டால் இந்த காலத்தில் தான் அதிகமான மருந்து வந்துவிட்டது அதனை போடுவார்கள் ஆனால் கிராமபுறங்களில் இதற்க்கு நல்லெண்ணெய் வைத்து தேய்ப்பார்கள்.

திருநள்ளாறு நீங்கள் சென்றாலே அங்கு நல்லெண்ணெய் உடலில் தேய்த்து அதன்பிறகு குளத்தில் நீராடிவிட்டு அதன்பிறகு தான் சாமி தரிசனம் செய்ய செல்வீர்கள்.  நல்லெண்ணெய் தேய்த்து சனிக்கிழமை தோறும் நீங்கள் வீட்டிலேயே நீராடுவதும் நல்ல பரிகாரமாகவே இருக்கும். இதனை ஏழரைச்சனியின்பொழுது மட்டும் இல்லாமல் எல்லா காலத்திலும் செய்து வருவது நல்லது.

சிறப்பு கட்டண பதிவுக்கு இந்த வாரம் கடைசி கட்டணம் செலுத்துவதற்க்கு அதன்பிறகு கட்டணம் அதிகம் என்பதால் உடனே கட்டணத்தை செலுத்திவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: