Followers

Thursday, January 2, 2020

செயலை விரைந்து செய்வோம்


வணக்கம்!
          ஒரு வருடத்தில் வரும் பிறந்தநாள் மற்றும் வருடபிறப்பு எல்லாம் வருவது மக்கள் எல்லாம் சந்தோஷமாக எடுத்துக்கொண்டு அதனை கொண்டாடுவார்கள். இதனை சந்தோஷமாக கொண்டாடுவதை விட நம்முடைய வாழ்வில் நிறைய கடமைகளை எல்லாம் முடித்துக்கொண்டு இருக்கின்றீர்களாக என்பதை எச்சரிக்கை செய்யும் ஒரு நிகழ்வாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

நம்முடைய வாழ்வு என்பது ஒரு மின்னல் போன்றது என்று ஒரு ஆழ்வார் சொல்லிருக்கின்றார். மனிதவாழ்வை ஒரு நொடியில் வந்து சென்றுவிடும் மின்னலோடு ஒப்பிட்டு இருக்கின்றார். அவர் சொன்னது எல்லாம் மனிதவாழ்விற்க்கும் நிச்சயம் இல்லை என்பதை மின்னலோடு ஒப்பிட்டு சொல்லிருக்கின்றார். உங்களின் அருகில் உள்ள நபர்களை கூட பாருங்கள் உங்களோடு பேசிக்கொண்டு இருந்து இருப்பார் அவர் அடுத்த நாெடியில் கூட இறந்து இருக்கலாம்.

அவர்க்கு வந்த மரணம் நமக்கும் அடுத்த நாெடியில் கூட வரலாம். இந்த வாழ்வு நிச்சயம் இல்லாத ஒன்று தான். இதனை நமக்கு அறிவித்துக்கொள்வதற்க்கே இந்த வருடபிறப்பு பிறந்தநாள் எல்லாம் வருகின்றது. 

வருடப்பிறப்பை கொண்டாடிவிட்டு அடுத்தபதிவிலேயே இப்படி பயமுறுத்துவது போலவே சொல்லிருக்கின்றீர்களே என்று நினைக்கலாம். நாம் நமது கடமையும் நமக்குள்ள வேலையையும் விரைவாக முடிப்பதற்க்கு இதனை சொல்லுகிறேன். நம்மால் முடிந்த அனைத்து வேலையையும் செய்யுங்கள் அதனை விரைவாக செய்யவேண்டும் என்பதை சொல்லுவதற்க்கு இதனை சொல்லுகிறேன்.

சாதாரணமாக ஒரு ஆன்மீகவாதி முடிந்தளவு விரைவாகவே தன்னுடைய செயலை எல்லாம் செய்வார்கள். சாதாரணமானவர்களுக்கும் இந்த செயலை விரைந்து செய்யவேண்டும். நிலையற்ற இந்த உயிர் இந்த உடலில் இருக்கும் வரை நல்ல காரியங்களை எல்லாம் விரைந்து செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: