Followers

Thursday, January 30, 2020

ஆன்மசக்தியை அதிகரிப்பது எப்படி?


வணக்கம்!
          ஒரு நல்ல ஆன்மீகவாதியாக இருக்கும் நபர் எப்பொழுதும் எதையாவது நினைத்து கொண்டு சிந்தித்துக்கொண்டே இருக்கமாட்டார். சரியான நேரத்தில் சரியான படி சிந்திப்பார் மற்றபடி அமைதியாக இருந்துவிடுவார். இது தான் சக்தியை மேம்படுத்தி தன்வசம் வைத்துக்கொள்வது என்பது ஆகும். 

நீங்கள் அனைவரும் நல்ல ஆன்மீகவாதியாக இருப்பதற்க்கு முதல் முயற்சி எப்படி இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த நேரமும் எதையாவது சிந்திக்க வேண்டாம். அதே போல சிந்திக்காமல் செல்போனை பார்த்துக்கொண்டே இருப்பதும் தவறான ஒன்றாகவே இருக்கும். 

மனதின் தெம்பு குறைய ஆரம்பித்துவிடும். நாம் பார்த்த நமது தளத்தில் இருந்து வந்த ஆன்மீகவாதிகள் அனைவரும் கொஞ்ச நேரம் கிடைத்தால் செல்போனை எடுத்துக்கொண்டு யாரிடமாவது பேசிக்கொண்டு இருப்பதை செய்துக்கொண்டு இருக்கின்றனர்.

பிறரிடம் பேசுவது தவறு இல்லை ஏதோ ஒரு நேரத்தில் பேசுங்கள் மற்ற நேரத்தில் அமைதியாக உங்களின் சக்தியை அதிகரிக்க வேண்டிய வேலையை செய்ய வேண்டும். ஒரு நாள் என்பதில் போன் பேசுவதற்க்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும் மற்றபடி சிந்தனை இல்லாமல் இருந்தால் நல்லது. உங்களுக்கு ஒரு வேலை வரும்பொழுது அந்த நேரத்தில் அதனை ஈடுபட்டால் விரைவில் அது நடைபெறுவதற்க்கு மேலே சொன்னதை கடைபிடிக்கவேண்டும்.

ஆன்மசக்தி நன்றாக இருக்கவேண்டும் என்றால் நம்முடைய சிந்தனையை மிகச்சரியாக பயன்படுத்தவேண்டும். இந்த யுக்தியை நீங்கள் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டால் எந்த கோவிலுக்கும் செல்லாமல் உங்களின் சக்தி அதிகரிப்பதை நீங்களே கண்டுக்கொள்ளமுடியும். குறிப்பிட்ட காலத்திலேயே அது உங்களுக்கு கை கொடுக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: