Followers

Thursday, January 9, 2020

கேள்வி & பதில்


வணக்கம்!
          பல நண்பர்கள் தொடர்ச்சியாக ஏழரைச்சனியைப்பற்றி கேட்டறிந்தனர். வருகின்ற சனிபெயர்ச்சியை முன்னிட்டு தான் அந்த பதிவையே தந்தேன். இனிமேலும் பல பதிவுகளை தருவதற்க்கு உள்ளேன். கட்டணபதிவிற்க்கு பணம் செலுத்தி அதற்க்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தியை தருகிறேன். 

ஏழரைச்சனி என்றாலே அது பெரிய பாதிப்பை கொடுக்ககூடிய ஒரு நிகழ்வாகவே பெருமையான நபர்களுக்கு இருக்கின்றது. இது அனைவருக்கும் பாதிப்பை கொடுக்கும் என்றால் அது கிடையாது என்று சாெல்லலாம் அதற்கு காரணம் அவர்களுக்கு நடைபெறும் தசாநாதனின் வலு அதிகமாக இருந்தால் அவர்களுக்கு பாதிப்பு என்பது குறைவாகவாகவே இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் சிறிய பாதிப்போடு போய்விடுவது உண்டு.

நான் அதில் சொல்லிருந்த ஒன்று ஏழரைச்சனி இரண்டாவது சுற்றைப்பற்றி சொல்லிருந்தேன். ஏழரைச்சனியின் இரண்டாவது சுற்றில் இருப்பவர்களுக்கு பொங்கு சனி தானே அது நிறைய செல்வத்தை கொடுக்காத என்றும் ஒரு சிலர் கேட்டனர். பொங்கு சனி என்பதை எடுத்துக்கொள்ளலாம். அனைத்து பிரச்சினையும் முடிவடைந்து அதன் பிறகு அது செல்வத்தை கொடுத்துவிட்டு செல்கின்றது என்று சொல்லலாம். இது கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன?

நிறைய பேருக்கு கடன்கள் ஏழரைச்சனியின் காலத்தில் தான் உருவாகியிருக்கின்றது என்பதையும் நாம் சுட்டிக்காட்டவேண்டும்.  ஏதோ ஒரு விதத்தில் கடன்களை உருவாக்கியது ஏழரைச்சனி என்று பலர் சொல்லிருக்கின்றனர். கடன்கள் உருவாயிருந்தாலும் அந்த கடனை சமாளிக்ககூடிய ஒரு வகையில் பணத்தையும் கொடுத்துக்கொண்டே தான் இருக்கின்றன.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒருவருக்கு கண்ணில் பிரச்சினை என்பது உருவாகும். உடலில் ஏதோ ஒரு உறுப்பில் அல்லது மொத்தத்தில் வந்தாலும் கண் பிரச்சினை என்பது இருக்கும். கண்ணை சுற்றி கருவளையம் போன்ற ஒன்று உருவாகும். பலருக்கு கண் ஆப்ரேஷன் செய்தது எல்லாம் இந்த ஏழரைச்சனியின் இரண்டாவது சுற்றில் தான் நடந்து இருக்கின்றது.  ஏழரைசனியின் தாக்கம் கண்ணை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளமுடியும். சனியைப்பற்றி நிறைய தகவலை இனிவரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: