வணக்கம்!
நாம் ஒரு ஆன்மீகவாதியாக இருக்கின்றோமா என்பதை தெரிந்துக்கொள்வதற்க்க பல வழிகள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக இதனை சொல்லுவார்கள். எனக்கு உடல் சிலிர்க்கும். எனக்குள் ஒரு மாதிரியான ஒரு உணர்வு வரும் என்று சொல்லுவார்கள். அவர் அவர்களுக்கு தகுந்த மாதிரியான ஒரு கருத்தை சொல்லுவார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளலாம். சக்தி உடலில் ஏறும்பொழுது அதாவது முதன் முதலாலாக உடலில் ஏறும் பொழுது உங்களின் உடல் அதிக சூடு அடையும் இதனை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். நமது உடலில் சக்தி ஏறுகின்றது என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
உங்களின் உடலில் இருந்து ஒரு விதமான வாசனை வீச ஆரம்பிக்கும். இதனை நன்கு உன்னிப்பாக கவனித்து நுகர்ந்து பார்க்கும்பொழுது இதனை தெரிந்துக்கொள்ளலாம். நமக்கு ஏற்படும் கனவில் நாம் அதிகமாக பறப்பது போன்ற ஒரு நிலையில் கனவு வரும் இதுவும் ஆன்மீகவாதியாக நாம் இருக்கின்றோம் என்று தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களின் தலைமுடியை வெட்டாமல் விட்டுவிட்டால் உங்களின் முடி ஜடை போல வரும். முடி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இதனை நாம் நன்றாக பராமரித்து வந்தால் கூட அது ஒட்ட ஆரம்பித்துவிடும். பெரியதாக வளரவேண்டும் என்பதில்லை கொஞ்சம் வளர்ந்தாலே அது உங்களுக்கு ஒட்ட ஆரம்பித்துவிடும். இப்படி இருந்தால் நீங்கள் ஆன்மீகவாதியாக இருக்கின்றீர்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம்.
நம்முடைய மனது எவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்துக்கொண்டு இருந்தாலும் உங்களின் மனதிற்க்குள் ஒரு அமைதி நிலவிக்கொண்டே இருக்கும். ஒரு சண்டை சச்சரவில் இருக்கும்பொழுது கூட உங்களின் மனது அமைதியில் இருக்கும்.
கட்டண பதிவை ஆரம்பிக்கும் நாள்கள் விரைவில் வர இருப்பதால் உடனே இதில் இணைந்துக்கொள்ளுங்கள். பதிவை ஆரம்பித்த பிறகு கட்டணம் பனிரெண்டாயிரம் என்று ஏற்ற இருப்பதால் உடனே பத்தாயிரம் பணத்தை செலுத்தி தங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment