Followers

Monday, January 27, 2020

ஆன்மீகம்


வணக்கம்!
         சராசரி மனிதனை விட ஒரு ஆன்மீகவாதிக்கு பிரச்சினையும் அதிகமாக வரும் அதே நேரத்தில் அதனை சமாளிக்கும் திறமையும் அதிகமாகவே வரும். ஆன்மீகத்தில் நான் இருக்கிறேன் எனக்கு பிரச்சினை என்பது வரவே வராது என்ற நிலைபாட்டில் இருக்கமுடியாது. சராசரி மனிதனை விட அதிகமாகவே பிரச்சினை சந்திக்க நேரிடும்.

ஆன்மீகத்தில் இருப்பதற்க்கு நான் சும்மாகவே இருந்துவிடலாமே என்று கேட்கலாம். ஆன்மீகத்தில் நிறைய பிரச்சினை என்பது வந்தாலும் சாதிக்ககூடிய நிறைய ஆற்றலை கொடுத்துவிடும். நிறைய சாதிக்கமுடியும். சாதரணமானவர்கள் ஒரு காரியத்தை சாதித்தால் ஆன்மீகவாதிகள் பத்து காரியத்தை சாதித்துவிடுவார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்களை நோக்கியே நிறைய காரியங்கள் தேடிவரும்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களின் ஜாதகத்தை பார்த்தால் படுமோசமாகவே இருக்கும். நிறைய தோஷங்கள் மற்றும் அனைத்து கிரகங்களும் பலம் இழந்து காணப்படும். உங்களின் ஜாதகத்திலும் இப்படி இருக்கும் என்பதை பார்த்தால் தெரிந்துக்கொள்ளமுடியும் அப்புறம் எப்படி சாதிக்கின்றார்கள் என்று கேட்கலாம். இவர்களே அதனை தேடி தேடி கற்றுக்கொண்டு அதில் ஜெயித்துவிடுவார்கள்.

ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கிரகமும் பெரியதாக ஒத்துழைப்பதில்லை இருந்தாலும் சாதிப்பார்கள். இதனை உங்களிடம் சொல்லுவதற்கும் காரணம் நீங்கள் அனைவரும் எட்டமுடியாத தூரத்தில் இருந்தாலும் அதனை எட்டி சாதனைப்படைப்பவர்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்.

நமது அம்மன் கோவில் வேலை மீண்டும் ஆரம்பிக்க இருப்பதால் அனைத்து நண்பர்களும் அதற்காக செயல்பட்டு உதவுங்கள் விரைவில் அம்மன் கோவில் கட்டும் பணியை ஆரம்பிப்போம். கட்டண சோதிட பதிவு அமாவாசை அன்று ஆரம்பிப்பதாக சொல்லிருந்தேன். ஒரு சில காரணங்களால் அது தள்ளி சென்றுள்ளது. ஒரு சில நாட்களில் அதனை தந்துவிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: