Followers

Wednesday, October 31, 2012

ஆன்மீக அனுபவங்கள் 13



வணக்கம் நண்பர்களே ஆன்மீக அனுபவத்தில் நாம் பார்க்க போவது அசைவ மேட்டர்.  ஏன் என்றால் இன்று பலபேர் தன்னுடைய ஆன்மீக வியாபாரத்திற்க்கு பயன்படுத்தும் சொல் நீங்கள் ஆன்மீகத்தில் இருந்தால் அசைவம் சாப்பிடகூடாது என்று சொல்லுகிறார்கள். உண்மையில் அசைவம் சாப்பிட்டால் ஆன்மீகத்தில் முன்னேற முடியாதா என்பதை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

அசைவம் சாப்பிட்டால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும். நீங்கள் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் பொருளாதாரத்தில் நீங்கள் முன்னேற்றம் அடையலாம் என்று பல பேர் பிரசாரம் செய்கிறார்கள். சில பேர் சித்தர்களை சந்திப்பதற்க்கும் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

உண்மையில் அசைவம் என்பது உயிர்களை கொல்லுவது கூடாது என்று அர்த்தத்தில் இதை நான் எடுத்துக்கொண்டேன். உயிர்களை கொல்லுவதில் சின்ன உயிர் பெரிய உயிர் என்று இருக்கிறாதா என்று எனக்கு தெரியவில்லை. சைவமாக இருந்தாலும் அது உயிர் தான். ஒரு மரத்திற்க்கும் உயிர் இருக்கிறது. சைவம் என்று சொன்னால் அந்த மரத்தை அல்லது காய்கறிகளை சாப்பிட பயன்படுத்துவதும் தவறு தான்.

நாம் சாப்பிடும் கத்தரிகாய், மாம்பழம் போன்றவற்றில் உள்ளே பூச்சி இருக்கிறது அதுவும் உயிர் தான் என்ன பெரிதாக இருந்தால் அதை எடுத்துவிடுகிறோம் அது கண்ணுக்கு தெரியாத சின்ன சைசில் இருந்தால் அதை விட்டுவிடுகிறோம் உண்மையில் அதுவும் உயிர் தான்.

அசைவம் சாப்பிட்டால் உங்களால் செல்வ நிலையில் உயரமுடியாது என்றும் சொல்லுகிறார்கள். நீங்களே பாருங்கள் எத்தனையோ பணக்காரர்கள் ஒரு இனத்தில் இருந்து இன்று உலகமாக பணக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பான்மையான மக்கள் சாப்பிடுவது அசைவம் தான் சாப்பிடுகிறார்கள். அசைவம் சாப்பிடுவதால் செல்வநிலை சரியும் என்று சொன்னால் அவர்களால் எப்படி பணக்காரர்களாக இருக்கமுடிகிறது. உண்மை அது இல்லை என்று தான் தோன்றுகிறது.

சித்தரை தரிசிக்க அசைவம் சாப்பிடுவதை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களை வணக்கினால் தரிசனம் தருவேன் என்று எந்த கல்வெட்டில் இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் அதை படித்து பார்க்கலாம். சித்தர்கள் காலத்தில் இருந்த மக்கள் சிவனை மற்ற அனைத்து தெய்வங்களையும் வணங்கிய போது அவர்கள் தெளிவாக பஞ்சபூதங்களை வணங்கினார்கள். இவர்கள் இப்பொழுது தரிசனம் தருவது என்பது எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்.

அசைவம் சாப்பிடுவது என்பது அந்த உயிர்கள் மேல் பரிதாபபட்டு அசைவம் சாப்பிடாமல் இருந்தால் நல்லது. வெறும் ஒன்றும் இல்லாத காரணங்களுக்காக அசைவம் சாப்பிடுவதை விடுங்கள் என்று சொல்லுவது தவறான வழியாக தான் இருக்கும்.

எப்பொழுது ஒரு மனிதனுக்கு கட்டுபாடு அதிகமாக விதிக்கிறார்களோ அப்பொழுது அந்த மனிதன் அதை நாடமாட்டான். அந்த கட்டுபாடு இறைவனை வணங்குவதிலும் செலுத்தினால் இதனை விட்டுவிட்டு ஓடிவிடுவான்.

தெய்வபிறவி ராமனுக்கே குகன் மீனும் தேனும் தான் கொடுத்து உபசரித்தான்  அதை எதையும் பொருட்படுத்தாமல் அதை அப்படியே எம்பெருமான் வாங்கியவர் ஸ்ரீராமன். 

கண்ணப்ப நாயனார் கதைப்பற்றி நீங்களே படித்து இருக்கலாம் அவர் சிவனுக்கு என்ன கொடுத்தார் பால் பழமா கொடுத்தார் அவர் கொடுத்தது பன்றியின் இறைச்சியை தானே கொடுத்தார். எத்தனையோ பேர் சிவனைப் பற்றி பாடி இருப்பார்கள் அவன் அவன் காட்டு கத்து  கத்தி பாடலை பாடிக்கிட்டு இருந்த நேரத்தில் கண்ணப்பரால் எப்படி எளிதாக சிவனை அடைய முடிந்தது.

இந்த கண்ணப்ப நாயனாரை பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம். கண்ணப்ப நாயனார் ஒரு காலமும் இறைவனை அடைந்துவிட வேண்டும் என்று நினைக்கவேயில்லை அது நடந்தது எதிர்பாராதமுகமாக நடந்ததே என்று தான் சொல்ல வேண்டும். நம்மிடமே சில அறிவு ஜீவிகள் கேட்டு இருக்கலாம் எப்படி ஒருவன் அசைவம் சாப்பிட்டுக்கொண்டு இறைவனை அடையமுடியும் என்று கேட்பார்கள்.

கண்ணப்பர் காட்டு வழியில் போகிறார் அவர் எதைச்சயாக அந்த லிங்கத்தை பார்க்கிறார் அவ்வளவு தான் அதனனுடன் ஒன்றிவிடுகிறார். அந்த லிங்கத்தை பார்த்தவுடன் தனியாக இவர் இங்கு இருக்கிறார் வெறும் பூ மட்டும் போட்டு இருக்கிறார்கள் இவரின் பசிக்கு யாரும் உணவை வைக்கவில்லை என்று தான் கேட்கிறார். 

அவருக்கு எப்படி படைக்க வேண்டும் என்று கூட தெரியவில்லை உடனே அவர் செய்தது நான் சாப்பிட்ட கறியிலேயே எது சுவையாக இருக்கிறதோ அதை படைக்க வேண்டும் என்று நினைக்கிறார் அதற்கு அவர் அந்த சிவனை விட்டு சென்ற பிறகு தேடி தான் உணவை தரவேண்டும். அப்படி நினைக்கும் போதே இவரை தனியாக எப்படி இங்கு விட்டு செல்லுவது என்றும் நினைக்கிறார்.

நாம எந்த மாதிரி மனநிலையில் இருந்தால் ஒருவரை தனியாக விட்டு செல்ல கூடாது என்ற மனநிலை வரும். அது குழந்தையாக இருந்தால் மட்டுமே இந்த மனநிலை வரும். எப்படி குழந்தையை விட்டு தனியாக செல்லுவது என்று நினைப்போம். அந்த லிங்கத்தை அவர் குழந்தையாக எண்ணி இருக்கிறார். உண்மையில் எவனுக்கு இந்த மனநிலை வரும்.

கடைசியில் வழி தெரியாமல் ஆகா குழந்தைக்கு பசிக்குதே என்று எண்ணி வேட்டியாடி உணவை படைக்கிறார். எப்படி பட்ட பக்தி என்று நீங்களே புரிந்து கொண்டு இருப்பீர்கள். இப்படி பட்ட ஒரு பக்தி எவனுக்கு இருக்கோ அவன் யாரிடமும் உபதேசம் கேட்கமாட்டான் உபதேசம் செய்யமாட்டான். 

இந்த பக்தி என்னிடம் இருந்தால் நான் பிளாக் எழுதிக்கொண்டு இருக்க மாட்டேன். உங்களிடம் இருந்தால் பிளாக்கை படித்துக்கொண்டு இருக்கமாட்டீர்கள். என்னால் அந்த பக்தியை இறைவனிடம் காட்டமுடியவில்லை. அது ஏன் என்று என் மனநிலையில் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.இந்த பக்தி இருந்தால் எந்த ஆசிரமத்திலும் போய் நிற்கமாட்டீர்கள் எந்த குரு கிடைப்பான் என்று தேடமாட்டீர்கள்.

அசைவம் ஆன்மீகத்திற்க்கு எதிரி கிடையாது. இந்த ஆன்மீக உலகத்தில் கண்ணப்பர் போல் ஒருவன் இதுவரை வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆறே நாட்களில் சிவனை அடைந்தவன் கண்ணப்ப நாயனாரை தவிர வேறு எவறும் இல்லை. கடைசி நேரத்தில் சிவனின் கண்ணிற்க்கு பிரச்சினை என்று வந்ததும் தன் கண்ணை கொடுத்தவன் அடுத்த கண்ணிற்க்கும் பிரச்சினை என்று  வந்தவுடன் தனது அடுத்த கண்ணையும் கொடுக்க உடனே தன் அன்பை எடுத்தவன் எப்படிபட்டவன். அந்த நேரத்தில் அவன் ஒரு கணம் தாமதித்தாலும் இன்று அவன் பெயரை எழுதிக்கொண்டு இருக்க மாட்டோம். உடனே செய்தான் பாருங்கள் ஆனால் நாம் கடவுளுக்கு தன் மயிரை கூட கொடுக்க எப்படி தயங்குகிறோம்.

நாம் இப்பொழுது எப்படி இருக்கிறோம் தன் மயிரை கூட கொடுக்க தயங்குகிறோம். நாம் எப்படி அந்த சிவனை அடைவது. சிவன் என்றால் அன்பு அந்த அன்புக்கு நாம் அன்பு செலுத்த முடியவில்லை. நாம் அன்பு குறைவாக உள்ளவர்களாக இருக்கிறோம்.

கண்ணப்பர் போல் இருந்தால் தான் அவன் கடவுள். இன்றைக்கு எப்படி இருக்கிறது ஒரு பிரச்சினைக்கு சாமியார் எத்தனை பேட்டி கொடுக்கிறார் என்று பாருங்கள். எங்கோ துப்பாக்கி சுடு நடந்ததற்கு ஒரு சாமியார் எப்படி பயந்தார் எப்படி உளரி பேசினார் என்று உங்களுக்கு தெரியும் உண்மையில் அந்த கடவுளை அடைந்தவனுக்கு இந்த உலகத்திற்க்கு பதில் தரவேண்டும் என்ற அவசியம் ஒரு போதும் இருக்காது. அவன் போக்கிற்க்கு போய் கொண்டு இருப்பான் எது நடந்தாலும் அவனுக்கு ஒன்றும் தெரியாது. அவர்கள் கடவுளா? ஒரு பிரச்சினைக்கே 1008 பேட்டி கொடுப்பவன் கடவுளா?.  அவன் உங்களுக்கு எதனை கற்று தரமுடியும் என்று கொஞ்சம் யோசித்தால் புரியும்.

அசைவம் ஆன்மீகத்திற்க்கு எதிரியா அல்லது நண்பனா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

தனி காட்டு ராஜா said...

///அசைவம் சாப்பிட்டால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும். நீங்கள் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டால் பொருளாதாரத்தில் நீங்கள் முன்னேற்றம் அடையலாம் என்று பல பேர் பிரசாரம் செய்கிறார்கள். சில பேர் சித்தர்களை சந்திப்பதற்க்கும் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.////

அசைவம் செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுக்கும்....உடல் ஒரு மந்த நிலையில் இருக்கும்...இது . ஆன்மிக பயிற்சிக்கு ஏற்றதல்ல ...
ஆனால் சித்தர்களை சந்திப்பது ,பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையலாம் என்பது எல்லாம் வடிகட்டுன பொய் என்று தான் தோன்றுகிறது
நல்ல பதிவு சுப்பு ....