Followers

Thursday, May 15, 2014

பிரச்சனையும் தீர்வும் பகுதி 26


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைக்கு இருக்கும் முக்கால்வாசி பேர்களுக்கு பிரச்சினை என்று வருவது அவர்களின் மனதில் இருந்து தான் வருகிறது. மனதுக்காரகன் சந்திரனுக்கு நாம் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ராசியே அவரை வைத்து தானே சொல்லுகிறோம். 

சந்திரன் வழியாக தான் பெரும்பாலும் கிரகங்கள் தங்களின் ஆதிக்கத்தை காட்டுக்கிறது. சந்திரனை இந்த கிரகங்கள் தாக்கும்பொழுது சம்பந்தப்பட்ட மனிதர் தன் மனதில் தவறான எண்ணங்கள் ஏற்பட்டு தீயவழியில் சென்றுவிடுகிறார்கள். அதனால் அவர் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிப்படைகின்றன.

இன்றைக்கு ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனி என்று சொல்லுவது எல்லாம் மனதை வைத்து தானே சொல்லுகிறார்கள். உண்மையி்ல் இது எல்லாம் வேலை செய்கிறதோ இல்லையோ இருக்கின்ற சோதிடர்கள் எல்லாம் உங்களுக்கு ஏழரைச்சனி என்று சொல்லிவிட்டுவிடுகிறார்கள். அதனை மனதில் போட்டுக்கொண்டு எந்த காரியம் செய்தாலும் ஏழரைச்சனி என்று மனதில் நினைத்து செய்வதால் நல்ல வேலையும் தவறாக செய்துவிடுகிறீர்கள்.

மனதை நீங்களாவே கெடுத்துக்கொள்வது தான் அதிகம் நடக்கிறது.ஏழரைசனியா இருந்தாலும் அஷ்டமசனியாக இருந்தாலும் அதிககவலைப்படாமல் உங்களின் மனதில் அதிகதாக்கத்தை விடாமல் இருந்துவிட்டால் பெரிய பாதிப்பு உங்களுக்கு வந்துவிடாது. 

ஏழரைச்சனி மற்றும் அஷ்டமசனி எல்லாம் இருக்கின்றது என்பதை நான் ஒற்றுக்கொள்கிறேன் ஆனால் அது அந்தளவுக்கு தாக்கத்தை உங்களின் மேல் தாக்காது. சோதிடர்கள் அதிக தாக்கத்தை உங்களின் மனதில் வைத்துவிடுவார்கள். அது தான் பிரச்சினை.உங்களின் மனதிற்க்கு தெம்பு தரும் வழிபாட்டை நீங்கள் பின்பற்றி வந்தால் போதும்.

அம்மன் பூஜை வரும் செவ்வாய்கிழமை அன்று நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, thanks.
How to make chandran as powerful in our horo?