Followers

Saturday, May 3, 2014

குலதெய்வம்


ணக்கம் ண்பர்களே!
                    ஒரு சில நண்பர்களுக்கு குலதெய்வத்தைப்பற்றி தெரியவில்லை என்று சொல்லுகின்றனர். குலதெய்வம் எங்கு உள்ளது என்பதே எங்களுக்கு தெரியவில்லை என்றனர். ஒரு சில இலங்கை நண்பர்களுக்கு எங்களுக்கு குலதெய்வ வழிபாடு எல்லாம் கிடையாது என்றும் சொன்னார்கள்.

குலதெய்வம் தெரியாதவர்கள் தங்களின் இஷ்டதெய்வத்தை வணங்கி வருகின்றனர். அந்த இஷ்டதெய்வத்திற்க்கு பச்சை பரப்புதல் செய்து வழிப்பட்டு வாருங்கள். அப்படி வழிப்பட்டு வரும்பொழுது உங்களின் குலதெய்வம் கூட தெரிவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது.

குலதெய்வ வழிபாடு செய்து வந்தவர்கள் ஒரு சில நாட்களில் அதனை மறந்துவிடுவார்கள். ஏன் பச்சை பரப்புதலை கூட செய்து வருவார்கள் ஒரு காலத்தில் அதனையும் விட்டுவிடுவார்கள். அந்த நேரத்தில் உங்களின் குலதெய்வம் சும்மா இருக்காது. குலதெய்வம் உங்களிடம் வந்து எனக்கு பசிக்கிறது என்று உங்களின் கனவில் கேட்கும். ஏதாவது ஒரு உருவத்தில் வந்து சாப்பாடு போடு என்று கேட்கும்.

ஒரு சிலர் பெருமாளை குலதெய்வமாக வணங்கிவருவார்கள். அப்படி வணங்கி வருபவர்களும் இந்த வழிப்பாட்டை செய்துவரலாம். பெருமாளுக்கும் பச்சைப்பரப்புதலை செய்துவரலாம். பச்சை பரப்புதல் என்பது ஒரு வழிமுறை இதனை அனைத்து தெய்வங்களுக்கும் செய்துவரலாம்.


நன்றி நண்பர்களே !


அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

nallur parames said...

ஓம் நமோ நாராயணா