Followers

Friday, May 23, 2014

பரிகாரம்


வணக்கம் நண்பர்களே !
                    பெரும்பாலான நண்பர்கள் எதிர்பார்க்கும் விசயம் ஏதாவது பரிகாரம் செய்துக்கொடுங்கள் என்று தான் இருக்கின்றது. எத்தனையோ வழிபாட்டு முறைகளை சொல்லிக்கொடுத்தாலும் மக்களிடம் இருக்கும் சோம்பேறி தனம் அடுத்தவர்களை வைத்து வேலை வாங்கவேண்டும் என்று நினைக்கிறது.

நான் பரிகாரம் செய்யும்பொழுது விஷேசமாக ஒன்றும் செய்வதில்லை. பதிவில் இருக்கும் விசயங்களை அப்படியே பரிகாரமாக உங்களுக்கு செய்யபோகிறேன். உங்களிடம் இருந்து கூடுதலாக பணம் வாங்கபோகிறேன் வேறு ஒன்றும் கிடையாது.

உங்களின் மனநிலை எனக்கு பணம் கொடுத்து செய்தால் உங்களுக்கு காரியம் வெற்றி அடையும் என்ற நிலையில் வைத்திருக்கிறீர்கள்.என்னுடைய வழிபாட்டு முறைகளை நீங்கள் பின்பற்றி முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்க்காக தான் இதனை கஷ்டப்பட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏதாவது ஒரு வழிபாட்டு முறையை நீங்கள் பின்பற்றி வந்தால் போதும் உங்களுடைய பிரச்சினைகள் குறைய ஆரம்பித்துவிடும்.

நான் பரிகாரம் சொல்லும்பொழுது அதனை எப்படி செய்யவேண்டும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொடுத்துவிடுகிறேன். அதனை நீங்கள் செய்துக்கொள்வது உங்களுக்கு பணம் செலவை குறைக்கும். தேவையற்ற பணச்செலவை உங்களுக்கு வைத்துவிடகூடாது என்பதற்க்காக நான் சொல்லுகிறேன். 

நீங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நான் சொல்லும் வழிபாட்டு முறைகளை பின்பற்றுங்கள். என்னை கூப்பிட்டு செய்துக்கொடுங்கள் என்று கேட்காதீர்கள். உங்களின் பணத்தை சேமித்து உங்களின் வாழ்க்கையை உயர்த்திக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Kalairajan said...

அய்யா
தங்களை போல் ஒரு ஆன்மிகவதியை நான் கண்டதுஇல்லை.மக்கள் தாங்கலே செய்யும் பரிகாரங்களை சொல்லி அதையும் அவர்களே செய்யுங்கள் என்று சொல்வதற்கு பெரிய மனது வேண்டும்

rajeshsubbu said...

தங்களின் பாராட்டுதலுக்கு நன்றி Kalai Rajan