Followers

Saturday, April 18, 2015

சனி தசா பகுதி 12


வணக்கம்!
          சனித்தசாவைப்பற்றி பார்த்து நீண்ட நாட்களாவிட்டது. இனி தொடர்ந்து பார்க்கலாம். ரிஷபத்தில் சனி அமர்ந்து ஒருவருக்கு சனி தசா நடைபெற்றால் எப்படிப்பட்ட பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

எனது நண்பர் ஒருவருக்கு ரிஷபத்தில் சனி அமர்ந்து தசாவை நடத்தியது. சனியின் சுயபுத்தியில் அவன் நடைபாதை கடையில் பழம் விற்க்கும் தொழில் செய்து வந்தான்.சனியின் சுயபுத்தியால் அவனின் வியாபாரம் வரவுக்கும் செலவுக்கும் சமமாகவே இருந்து வந்தது.

சனியின் சுயபுத்தி முடிந்த பிறகு அவன் பழக்கடை ஒரு வாடகை கடைக்கு மாற்றினான். கொஞ்ச காலத்தில் எல்லாம் பழக்கடை பெரிதாகி பழங்களை மொத்தமாக வாங்கி விற்க்கும் அளவிற்க்கு பெரிய அளவில் அவன் உயர்ந்துவிட்டான்.

சுக்கிரனின் வீடாக இருப்பதால் பழ வியாபாரம் அவனுக்கு அமைந்திருக்கலாம். சனியும் அந்த வீட்டில் அமர்ந்து தசாவை நடுத்தும்பொழுது சுக்கிரன் மற்றும் சனியும் இரண்டு சேர்ந்து அவனுக்கு அப்படிப்பட்ட தொழிலில் வெற்றியை தந்து இருக்கலாம்.

ரிஷபத்தில் சனி அமர்ந்து தசாவை நடத்தும்பொழுது தானியம் வழியாக உங்களுக்கு வருமானம் வரும். வியாபாரம் வழியாக லாபம் வரும். பூ பழங்கள் ஆதாயம் உண்டு. நிறைய தர்மங்கள் செய்வர்களாக இருப்பார்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: