Followers

Thursday, April 9, 2015

திருவிழா


வணக்கம்!
          தென்மாவட்டங்கள் முழுவதும் தற்பொழுது கோவில்களில் திருவிழா நடைபெறும். பல நண்பர்கள் ஊரை விட்டு பணியின் காரணமாக வெளியூர்களில் தங்கியிருப்பார்கள். அப்படிப்பட்ட நபர்கள் வேலை இருக்கிறது இந்த முறை திருவிழாவிற்க்கு செல்லவேண்டாம் அடுத்தமுறை திருவிழாவிற்க்கு செல்லலாம் என்று இருப்பார்கள்.

எப்பொழுதும் இருக்கின்ற கோவில் தான் எப்பொழுதும் இருக்கின்ற தெய்வம் தான் என்று சொல்லிக்கொண்டும் இருப்பார்கள். எப்பொழுதும் இருக்கின்ற தெய்வம் என்றாலும் திருவிழா காலங்களில் விஷேசமாக அலங்கரிப்பார்கள். சிறப்பான ஆராதனைகள் நடைபெறும். அப்படிப்பட்ட காலங்களில் எப்பொழுதும் இருக்கும் தெய்வத்தின் இருந்து அதிகப்படியான சக்தி வெளிப்படும்.

அதிகமான சக்தியை நாம் திருவிழா காலங்களில் பெறலாம். நம்மிடம் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்வதற்க்கு இப்படிப்பட்ட திருவிழாகளை தவிர்க்காமல் சென்றுவாருங்கள்.

திருவிழாவிற்க்கு உங்களின் வாரிசுகளை அழைத்துக்கொண்டு சென்று காண்பியுங்கள். இது ஒரு பாடமாகமோ அவர்களுக்கு அமையும்.உங்களின் குலதெய்வத்தின் திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ளும்பொழுது இந்த வருடத்திற்க்கு உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் செல்ல உங்களின் குலதெய்வம் அருள்புரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: