Followers

Monday, April 27, 2015

சனியின் பிடி


வணக்கம்!
         பல நண்பர்கள் என்னிடம் ஜாதகம் பார்க்க அவர்களின் ஜாதகத்தை அனுப்புகிறார்கள். அவர்களின் முதல் கேள்வி எனக்கு இப்பொழுது வேலை இல்லாமல் இருக்கின்றேன். செய்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டேன். மீண்டும் வேலை தேடுகிறேன் வேலை கிடைக்கவில்லை என்று கேட்கிறார்கள்.

இவர்களின் ஜாதகத்தை பார்த்தால் ஒன்று அஷ்டமசனியின் பிடியில் இருக்கின்றார்கள் அல்லது ஏழரை சனியின் பிடியில் இருக்கின்றார்கள். அஷ்டமனி மற்றும் ஏழரை சனியின் பிடியில் இருக்கும்பொழுது நாம் வேலை செய்துக்கொண்டிருக்கின்ற வேலையை விட்டுவிடகூடாது. நல்ல வேலை வருகின்றது என்றாலும் அந்த வேலை உறுதியாவிட்டது என்றால் வேலையை விடலாம்.

அஷ்டமசனி மற்றும் ஏழரை சனி இரண்டும் நமக்கு எது ஆதாரமாக இருக்கின்றதோ அதில் விளையாடிவிடும். அஷ்டமசனியின் காலத்தில் உடலில் விளையாடிவிடுவது உண்டு. அதிகம் நமது உடலில் தான் கை வைக்கும். 

சனியின் பிடி நமக்கு ஏற்பட்டது என்றால் நீங்கள் ஆஞ்சநேயருக்கு வழிபாடு செய்வது நல்லது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு செய்யலாம். திருநள்ளார் சென்று தீர்த்தம் ஆடிவிட்டு சாமிகும்பிட்டு வரலாம்.

நீங்கள் பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் இதனை முதலில் செய்துவிட்டு அதன் பிறகு வேறு பரிகாரம் செய்யுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: