Followers

Tuesday, April 7, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
         மதுரைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று அருகில் இருக்கும் திருஅண்ணாமலை என்ற ஊரில் இருக்கும் நரிபாறை என்ற இடத்தில் இருக்கும் சித்தர்களை தரிசனம் செய்துவிட்டு வந்தேன். இந்த இடத்திற்க்கு நான் பலமுறை சென்று இருந்தாலும் நமது நண்பரை அழைத்துக்கொண்டு சென்றது நல்ல மகிழ்வாக இருந்தது. மதுரையில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று மாலை வந்துவிட்டேன். 

பல ஊர்களுக்கு பயணம் செய்வதாலும் சொந்த வேலை காரணமாகவும் உங்களுக்கு பதிவை தரமுடியவில்லை இனி தொடர்ந்து பார்க்கலாம். ஒவ்வொரு ஊரில் இருக்கும் நண்பர்களை அழைத்துக்கொண்டு ஏதாவது ஒரு கோவில் அல்லது சுற்றுலா தளங்களை தரிசனம் செய்துவிட்டு வருவது தற்பொழுது அதிகமாக வைத்திருக்கிறேன்.

என்னை சந்தித்து உதவி கேட்கும் நண்பர்களுக்கு அம்மனை வைத்து ஏதாவது உதவி செய்வது உண்டு. வரும் நண்பர்கள் அனைவருக்கும் வாய்ப்பு தருகிறேன். வாய்ப்பை தவறவிட்டால் நான் பொறுப்பு அல்ல.

என்னிடம் இருப்பதை செய்வதற்க்கு தான் நான் இருக்கிறேன். நண்பர்கள் நிறைய பேர் வருகின்றனர். வருகின்ற நண்பர்கள் அனைத்தையும் இலவசமாகவே கேட்பது தவறான ஒன்று. கொஞ்சம் உங்களை மாற்றிக்கொண்டு என்னை தேடி வாருங்கள். நல்ல முன்னேற்றம் காணலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: