Followers

Saturday, April 4, 2015

அம்மன் பூஜை


வணக்கம்!
         என்னை சென்னையில் சந்தித்த ஒரு நண்பர் என்னிடம் எனது மகளுக்கு திருமணம் நடைபெறவில்லை. பல பரிகாரங்கள் செய்தும் ஒன்றும் பயன் இல்லை. நீங்கள் எப்படியாவது அம்மனை வைத்து அவளுக்கு திருமண ஏற்பாட்டை செய்து தாருங்கள் என்று கேட்டார்.

ஜாதககதம்பத்தை தொடர்ந்து படித்து வருவதால் அம்மனின் சக்தியைப்பற்றி அவருக்கு தெரியும். அவரிடம் நான் நீங்கள் தொடர்ந்து அம்மனை தினமும் பார்த்து வேண்டி வாருங்கள். நல்ல செய்தி வரும் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

நம்ம அம்மனிடம் வேண்டிய பிறகு சரியாக ஒரு மாதத்திற்க்குள் அவரின் பெண்ணிற்க்கு வரன் அமைந்தது. அம்மனின் பூஜைக்கும் அவர் காணிக்கை செலுத்தினார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரின் பெயரை பதிவில் நான் போடவில்லை. 

உங்களின் வேண்டுதல்களையும் ஒவ்வொரு பிரச்சினையும் தீரவேண்டும் என்று அம்மனிடம் வேண்டுதல் வையுங்கள். அம்மன் ஒவ்வொரு மாததிற்க்குள் உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொடுக்கும்.

அம்மனின் பூஜை அடுத்த வாரத்தில் நடைபெறும். அம்மனிடம் வேண்டுதல் வைத்து அதனை நிறைவேற்றியவர்கள் அம்மனின் பூஜைக்கு காணிக்கை செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு