Followers

Sunday, April 26, 2015

அம்மன் அருள்


வணக்கம்!
          நான் எந்த ஒரு வேலையும் எடுத்தாலும் அதில் ஆன்மீகத்தை செலுத்த கால அவகாசம் எடுத்துக்கொண்டு தான் செய்வது உண்டு. சமீபகாலமாக ரியல் எஸ்டெட் பக்கம் ஆன்மீகத்தை செலுத்த ஆன்மீகத்தை தயார் செய்துக்கொண்டு வருகிறேன்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு முருகன் காரணமாக இருந்தாலும் நமக்கு அம்மன் சரியாக செயல்படவேண்டும். அம்மன் ஒத்துழைப்பு இல்லை என்றால் ஒரு காரியமும் ஒழுங்காக நடைபெறாது.

இன்று நிலம் சம்பந்தப்பட்ட நபருக்கு பணம் வரவேண்டிய ஒன்று இருந்தது. நேற்றே அதற்க்கான வேலை எல்லாம் செய்துமுடித்துவிட்டு இருந்த நிலையில் இன்று பணம் தருவதாக சொன்னார்கள் என்று நண்பர் சொல்லிருந்தார்.

காலையில் கண்டியூர் இராமசுப்பிரமணியன் அம்மனை தரிசனம் செய்ய வருகிறேன் என்று சொல்லிருந்தார். அதற்காக அம்மனுக்கு பூஜை செய்ய தயார் செய்துக்கொண்டிருந்தேன். மதியம் பூஜை செய்யும்பொழுது நம் மனதில் ஒன்றை தெளிவுப்படுத்தியது. இன்று நிலம் சம்பந்தப்பட்ட விசயத்தில் பணம் வராது. அதற்கு காரணம் அஷ்டமி என்றது.

நானும் நண்பரிடம் போன் செய்து சொல்லிவிடலாம் இன்று நடைபெறாது என்று போன் செய்கிறேன். அவர் வாடிக்கையாளர் வீட்டில் இருந்து இப்பொழுது தான் வெளியில் வருகிறேன். அஷ்டமி என்பதால் பணத்தை இன்று தரவில்லை என்கிறார். அம்மனை பொறுத்தவரை நின்று இது தான் என்று சொல்லி அடிக்கும். அது தான் அம்மன் அருள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Om sakthi baraa sakthi