Followers

Saturday, April 4, 2015

செல்வ வளம்


வணக்கம்!
         இன்று சந்திரகிரகணம் இதனைப்பற்றி நேற்றே நான் சொல்லிவிட்டேன். சந்திரகிரகணத்தை வைத்து செல்வவளத்தை எப்படி மேம்படுத்திக்கொள்வது என்பதைப்பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

சந்திரகிரகணம் மதியத்திற்க்கு மேல் வந்தாலும் காலை பத்து மணிக்குள் சாப்பாட்டை சாப்பிட்டுவிடவேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லுவார்கள். அதாவது ஆறு மணி நேரத்திற்க்கு முன்பு சாப்பாட்டை சாப்பிடவேண்டும் அதன் பிறகு சாப்பிடகூடாது என்பார்கள். இந்த காலத்தில் இதனை எல்லாம் செய்வார்களாக என்பது தெரியாது. 

நமக்கு பிரச்சினை வருகிறது அதாவது பிரபஞ்சத்தின் வழியாக பிரச்சினை என்றால் அந்த நாளில் விரதத்தை நமக்கு பரிந்துரை செய்யும் சாஸ்திரம். சாப்பிட்டாலும் பரவாயில்லை கீழே உள்ளதை செய்து செல்வவளத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

செல்வவளத்திற்க்கு என்ன செய்யலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். சந்திரகிரகணம் மாலை 7 :15 மணிக்கு முடிவடைந்தவுடன் குளித்துவிட்டு தான தர்மம் செய்யுங்கள். இந்த நாளில் நீங்கள் செய்யும் தான தர்மம் உங்களை மிகப்பெரிய செல்வந்தராக உயர செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: