Followers

Wednesday, April 29, 2015

ஆலய தரிசனம்


வணக்கம்!
          நேற்று மதியம் நண்பர் ஒருவர் அவரின் பங்களிப்பை அளித்து இருந்தார். ஒரு வேலை காரணமாக பணம் அனுப்பியவுடன் இன்று செவ்வாய்கிழமை எப்படியும் சுவாமிமலை சென்று அவரின் பங்கை செலுத்தவேண்டும் என்று அடித்து பிடித்து சென்றேன்.

நான் கோவிலுக்கு செல்லும்பொழுது மாலை நேரமாகிவிட்டது. நான் கோவிலுக்குள் செல்லும்பொழுது அபிஷேகம் ஆரம்பித்தார்கள். பொதுவாக நான் கோவிலுக்கு சென்றால் அங்கு அந்த நேரம் பார்த்து ஏதாவது ஒரு விஷேசம் நடைபெறும். நான் சக்தியை பிறர்க்கு கொடுத்தவர்களுக்கு கூட அப்படி நடைபெறுவதை கண்டு என்னிடம் சொல்லியுள்ளார்கள்.

நாம் ஏதோ புண்ணியம் செய்து இருக்கிறோம். நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை இறைவன் கொடுத்து இருக்கிறார் என்று இறைவனுக்கு நன்றியை செலுத்துவேன்.

நாம் எங்கு சென்றாலும் அந்த பகுதியில் இருக்கும் நண்பர்களை தொடர்புக்கொண்ட பிறகு செல்லுவேன். சென்னையில் இருந்து நண்பர் ராஜ்குமார் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவிலைகளை தரிசனம் செய்ய வந்திருந்த தகவல் எனக்கு தெரிந்தவுடன் அவருக்கு போன் செய்து வந்துவிடுங்கள் என்றேன் அவரும் வந்துவிட்டார். அவரோடு தான் சுவாமி மலை தரிசனம் செய்தேன்.

இந்த பதிவை ஏன் உங்களுக்கு தருகிறேன் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. சுவாமி மலை முருகன் மிக சக்தி வாய்ந்த ஒருவர் நாம் என்ன வேண்டி சென்றாலும் நமக்கு கொடுக்க கூடியவர். கும்பகோணம் நீங்கள் செல்லும்பொழுது ஒரு முறை சென்று வேண்டிவிட்டு வாருங்கள் உடனே உங்களின் வேண்டுதலை நிறைவேற்றி வைப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: