Followers

Sunday, April 19, 2015

பீடை


வணக்கம்!
    மனிதன் பணம் சம்பாதிக்காமல் இருந்தால் கூட இருக்கலாம். ஒரு மனிதன் பீடையோடு இருந்தான் என்றால் அவனால் இந்த ஜென்மத்தில் கரை சேரமுடியாது.

பல பேர்களை நான் பார்த்து இருக்கிறேன் அவர்களிடம் நாம் நெருங்கினாலே நமது உடலுக்குள் ஏதோ செய்வது போல் தோன்றும்.ஒரு சிலருக்கு கோவிலுக்குள் சென்றால் தூக்கம் வந்துவிடும். தூக்கம் வருவது போல் கோவிலுக்குள் செய்துக்கொண்டு இருப்பார்கள்.

பீடையை தான் பேய் ஓட்டுகிறேன் அல்லது கெட்ட ஆவியை ஓட்டுகிறேன் என்று பிற மதங்களில் செய்துக்கொண்டு இருப்பார்கள். பீடை ஒரு மனிதனை கீழே தள்ளிவிடும் என்பதால் மதங்கள் இந்த விசயத்தில் எச்சரிக்கையுடன் இருந்து அறிவுறுத்துக்கொண்டே இருக்கும்.

உங்களுக்கு பீடை இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் நன்றாக எண்ணெய் தேய்த்து குளியுங்கள். வெள்ளிக்கிழமை தைலகுளியல் குளியுங்கள். தினந்தோறும் கோவிலுக்கு சென்று வாருங்கள். அமாவாசை மற்றும் பெளர்ணமி ஏதாவது ஒரு சிவன் கோவிலில் கிரிவலம் செல்லுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: