Followers

Tuesday, October 25, 2016

செவ்வாய் பரிகாரம்


ணக்கம்!
          இந்த செவ்வாய் பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதை ஆன்மீக அனுபவத்தில் பதிவாக சொல்லிருந்தேன்.  ஆன்மீக அனுபவங்கள் படிப்பவர்களுக்கு சலுகையாக ஒன்றை அறிவித்தேன் அது என்ன என்றால் நீங்கள் அருகில் இருக்கும் முருகன் கோவிலில்  ஏதாவது நன்கொடை வழங்கிவிட்டு அந்த ரசீதை அனுப்பிவிடுங்கள் எனக்கு பணம் அனுப்பவேண்டாம் என்று சலுகையாக சொல்லிருந்தேன். அதில் ஒருவர் அல்லது இருவர் அதனை செய்து இருக்கலாம். மீதி உள்ளவர்கள் எனக்கு பணத்தை அனுப்பிவிட்டார்கள்.

இன்றைக்கு பல நண்பர்களை தொடர்புக்கொண்டு ஒரு சில முருகன் கோவிலுக்கு நமது காணிக்கையை செலுத்தவேண்டும் அதாவது அந்த பூஜைக்கு அல்லது அன்னதானத்திற்க்கு ஏதாவது ஒரு விதத்தில் முருகன் கோவிலுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லிருக்கிறேன்.

இதுவரை நான் சென்ற முருகன் கோவிலில் தான் இதனை எல்லாம் செய்ய சொல்லிருக்கிறேன். அதோடு அடுத்த வேலையாக நான் சென்ற முருகன் கோவிலுக்கு மறுமுறை செல்ல இருக்கிறேன். 

இதுவரை வந்த ஜாதகத்தை எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு பதில் அனுப்பி இருக்கிறேன். இன்னமும் கொஞ்சம் இருக்கின்றது. பார்த்த ஜாதகத்தை எல்லாம் எடுத்து அனைத்தையும் லிஸ்ட் தயார் செய்து  வைத்திருக்கிறேன். 

நான் செல்லும் முருகன் கோவிலில் அவர்களுக்கு என்று பூஜை செய்யலாம் என்பது திட்டம். நமது அம்மன் கோவிலிலும் இது நடைபெறும். கடைசியில் அம்மன் வழியாக ஒரு சில பூஜை நடைபெறும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: