Followers

Wednesday, April 12, 2017

சூட்சமஉடல்


ணக்கம்!
          நம்முடைய வாழ்வில் நிறைய சாதிக்கவேண்டும். யாரும் எதிர்பார்க்காத ஒரு பெரிய வளர்ச்சியை அடையவேண்டும் என்ற நோக்கம் உடையவர்கள் முதலில் தன்னுடைய வாழ்க்கையை ஆன்மீகவாதியாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைத்தால் பெரிய வளர்ச்சியை அடையலாம். ஆன்மீகத்தில் அப்படி என்ன தான் நடக்கிறது என்றால் உங்களின் சூட்சமஉடல் வளர்ச்சியை நோக்கி செல்லுகின்றது. ஆரா என்று சொல்லக்கூடிய சூட்சமஉடல் நன்றாக இருந்தால் அவர்களை நோக்கி அனைத்தும் செல்லும்.

சூட்சமஉடலை எப்படி வளர்ப்பது என்று கேட்கலாம். நாம் செல்லுகின்றது கோவில் நாம் செய்கின்ற ஆன்மீகபணி மற்றும் புனிதநீராடல் போன்றவற்றால் சூட்சமஉடலை நன்கு வளப்படுத்த முடியும். யோகா மற்றும் தியானம் செய்தும் இந்த சூட்சமஉடலை வலுப்படுத்தமுடியும். 

கார்ப்ரேட் சாமியார்களை நாம் திட்டிக்கொண்டு இருப்போம். அவன் ஏமாற்றுகிறான். அவன் ஒரு போலி என்று சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் இவர்களிடம் சக்தி இருப்பதால் தான் கார்ப்ரேட் அளவுக்கு உயர்ந்து இருக்கின்றார்கள் என்று நாம் நினைப்பதில்லை. இவர்களிடம் செல்லும் நபர்களும் நன்கு படித்தவர்கள் தான் செல்வார்கள். இவர்களும் சூட்சமஉடலை மேம்படுத்த வழியை சொல்லுவதால் தான் வேலை நடக்கிறது.

வளர்ச்சியை நோக்கி செல்பவன் எல்லாவற்றையும் பயன்படுத்தினால் தான் அவன் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லமுடியும். என்னை தேடிவருபவர்களுக்கும் அவர்களின் சூட்சமஉடல் சக்தியை மேம்படுத்தும்பொழுது தான் அவர்களிடம் பெரிய ஆள்கள் வருகின்றார்கள். இதனையும் நான் செய்துக்கொண்டு தான் இருக்கிறேன். மேலே சொன்ன வழிகளை எல்லாம் பின்பற்றினால் நீங்கள் ஒரு நாளில் மிகப்பெரிய அளவில் வருவீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: