Followers

Wednesday, April 5, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
         மனிதன் என்ன தான் உழைத்தாலும் அவனுக்கு அதிர்ஷ்டம் என்ற ஒன்று இருக்கவேண்டும். உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துவிட்டு மணலில் படுத்து உருண்டால் ஒட்டுகின்ற மண் தான் ஒட்டும் என்பார்கள்.

நல்ல சாப்பாடு என்ற ஒன்றை பதிவை தந்தேன். அதனை நம் நண்பர்கள் படித்துவிட்டு ஒரு சில கருத்தை சொன்னார்கள். அதாவது நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு இருந்தால் நமக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துவிடுமா என்றவாறு கேட்டார்கள்.

பட்டினி கிடந்தால் மட்டும் நல்ல வாழ்க்கை கிடைத்துவிடுமா என்று தான் கேட்க தாேன்றுகிறது. அதாவது பட்டினி கிடந்து நல்ல நிலைக்கு ஒரு காலத்தில் வந்துவிடும் நேரத்தில் உடல் நோய் தந்தால் என்ன செய்வது என்பதனை கருத்தில் கொள்ளவேண்டும்.

சாப்பிடும் சாப்பாடு அதிகமாகவும் இருக்ககூடாது. அதே நேரத்தில் மிக மிக குறைவாகவும் இருந்துவிடகூடாது. நடுநிலையில் இருந்து பராமரித்து வருவது போல் செய்தால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல வாழ்க்கையை எதிர்காலத்தில் கொடுக்கும்.

மூட்டை தூக்குபவர்கள் கூட நல்ல முறையில் தான் உடலை வளர்த்து வருகின்றனர். அவர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துவிடுமா என்றும் நாம் நினைக்கலாம். உழைகின்றவர்களுக்கு ஒரு நாளைக்கு என்ன கிடைக்குமோ அது தான் கிடைக்கும்.

உங்களின் மனவலிமையை அதிகரித்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரும். மனசக்தியை அதிகரிக்க நீங்கள் என்ன செய்வீர்கள் யோகா செய்யவேண்டும் என்று ஒரு வார்த்தை சொல்லுவீர்கள். யோகாவில் என்ன நடக்கும் என்றால் உங்களின் முதுகெலும்பு வலுப்படுத்த யோகா துணைபுரியும். அனைத்தையும் நன்றாக கவனித்து பார்த்தால் உங்களின் முதுகெலும்புக்கு தான் அதிகமான பயிற்சியாக அது இருக்கும்.

முதுகெலும்பை ஏன் வலுப்படுத்துகின்றார்கள் என்றால் முதுகெலும்பு வலிமை அடைய அடைய உங்களின் மனசக்தியின் ஆற்றல் அதிகமாக இருக்கும். மனசக்தி அதிகமாக இருந்தால் உங்களை நோக்கி அதிர்ஷ்டம் வரும். 

யோகா செய்வர்கள் அதிக செல்வந்தர்களாக இருக்கின்றார்களா என்று நினைக்கலாம். அவர்கள் செய்யும் யோகாவை பொறுத்த விசயம் அது. கற்றுக்கொடுக்கும் ஆசானின் திறமையும் இதில் இருக்கின்றது

ஒரு நாள் நீங்கள் பட்டினி இருந்தால் உங்களின் இடுப்பு வலி ஏற்பட ஆரம்பிக்கும். முதுகெலும்பு பலன் குறைவதை அது வெளிப்படுத்துகின்றது. சாப்பாட்டை சாப்பிட்டவுடன் அந்த வலி போய்விடும்.

என்னை தேடிவருபவர்களிடம் நீங்கள் என்ன உணவை மேற்க்கொள்கின்றீர்கள் என்று நான் கேட்பதில்லை. நீங்கள் நன்றாக சாப்பிடவேண்டும் என்பதை தான் சொல்லுவேன். மனித உடலின் ஆதாரம் முதுகெலும்பு அந்த முதுகெலும்பை நீங்கள் வலுப்படுத்தும் விசயத்தில் நீங்கள் நன்றாக கவனம் செலுத்தினால் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக மாறலாம். மனசக்தியை அதிகரிக்க அதிகரிக்க உங்களை நோக்கி இந்த உலகம் வரும். 

சித்தர்கள் பட்டினியாகவே இருந்து தியானம் செய்கின்றார்கள் என்றால் அது வேறு கதை அது என்ன என்று வரும் பதிவில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: