Followers

Saturday, April 22, 2017

நம்பிக்கை


வணக்கம்!
         மனிதனுக்கு எந்த ஒரு விசயத்திலும் நம்பிக்கை வேண்டும். அந்த நம்பிக்கை தான் அவர்களை மேலே உயர்த்தும் விசயமாக இருக்கும். அம்மனிடம் கூட அப்படி தான் இருக்கவேண்டும். 

வாழ்வில் நம்பிக்கையில்லாமல் சென்று தான் நிறைய இழந்துவிட்டோமே இனிமேலாவது நம்பிக்கையோடு இருப்போம் என்று நினைப்பவர்களுக்கு தான் ஏதாவது வழி தெரியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு இருந்தால் போதுமானது தான்.

நிறைய நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு நான் சொல்லுவது நம்பிக்கையோடு இரு அனைத்தையும் நடத்திக்கொடுத்துவிடுவேன் என்று சொல்லுவேன். 

மாந்தி மூன்றாவது இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

மாந்தி மூன்றாவது இடத்தில் இருந்தால் நிறைய தைரியம் இருக்கும். எந்த விதத்திலும் பயம் என்பதே இருக்காது. எதனையும் துணிந்து செயல்படுத்த எண்ணுவார்கள். மூன்றில் மாந்தி இருந்தால் பிரச்சினை என்பதை விட இது ஒரு நல்ல யாேகம் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: