Followers

Sunday, April 23, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


ணக்கம்!
          பூமியின் புவியிர்ப்பு விசையை விட மனிதனின் சக்தி அதிகமானது. இதனை நன்கு உணர்ந்திருந்தனர் சித்தர்கள். இந்த புவியிர்ப்பு விசையை மனிதனால் எளிதில் கடந்து செல்லமுடியும் என்பதை அறிந்திருந்தனர்.

இது எப்படி சாத்தியம் 
                      பெரும்பாலான மனிதனின் சக்தி கீழ் நோக்கியே சென்றுக்கொண்டு இருக்கும். இது காமம் சம்பந்தப்பட்ட ஒன்று. மனிதனிடம் இருக்கும் இந்த சக்தியை மேல்நோக்கி எழுப்பும்பொழுது மனிதன் புவியிர்ப்பு விசையை கடந்து செல்கிறான் என்று அர்த்தம். இதனை தான் குண்டலிணி என்று சித்தர்கள் சொன்னார்கள்.

உங்களின் சக்தி புவியிர்ப்பில் இருந்துக்கொண்டே இருந்தால் நீங்கள் பிறவி சக்கரத்தில் இருப்பீர்கள். நீங்கள் பிறந்துக்கொண்டே இருக்கவேண்டும். பல ஜென்மங்களாக நீங்கள் இப்படி தான் இருந்துக்கொண்டு இருக்கின்றீர்கள். 

புவியிர்ப்பு சக்தியை நீங்கள் தாண்டினால் உங்களுக்கு மறுபிறப்பு இருக்காது. உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த புவியிர்ப்பு சக்தியில் மாட்டிக்கொண்டு இருக்கிறான். இதனை கடக்க தான் சித்தர்கள் குண்டலிணி என்ற கலையை பயன்படுத்தினார்கள்.

நீங்கள் ஒரு முறை இந்த பயிற்சியை செய்துவிட்டாலே போதும் மறுமுறை நீங்கள் இந்த பூமிக்கு வருவதற்க்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஜென்மம் என்பது உங்களுக்கு இருக்காது. இதனை தொடர்ச்சியாக சித்தர்கள் செய்துவந்தனர். மக்களையும் செய்ய சொல்லினர்.

நீங்கள் எங்கு சென்று ஆன்மீகபயிற்சி எடுத்தாலும் இந்த கலையை தான் செய்யசொல்லுவார்கள். ஏதோ ஒரு ஆன்மீகபயிற்சிக்கு சென்று குண்டலிணி எழுப்பு பயற்சி செய்து வாருங்கள். நீங்களும் சித்தர்களாக மாறிவிடுவீர்கள். 

பிறப்பு சக்கரத்தில் இருக்கவேண்டும் என்பவர்கள் இதனை எடுக்கவேண்டாம். மறுபிறப்பு வேண்டாம் என்பவர்கள் இதனை செய்ய ஆரம்பித்துவிடுங்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

KJ said...

Sir, Kethu 12 il irunthal maru piravi illai endra oru thagaval unde. Atharkum itharkum yethavathu thodarbu?