Followers

Friday, April 21, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          வெள்ளிக்கிழமை தைலக்குளியல் குளிக்க சொல்லிருந்தேன். அதனை அனைவரும் கடைபிடித்து வாருங்கள். வெள்ளிக்கிழமை அன்று ஒரு அம்மன் கோவில் சென்று வழிப்பட்டு வாருங்கள். 

மாந்தியை பற்றி எழுதியவுடன் நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு அவர்களின் ஜாதகத்தை பார்க்கவும் அதற்கு தீர்வும் கேட்டு வருகின்றனர். இன்னமும் நிறைய பதிவுகள் மாந்தியைப்பற்றி எழுதவேண்டும் அதனை எல்லாம் படித்து பயன்பெறுங்கள்.

இரண்டாம் வீட்டிற்க்கு பலனை நாம் சொன்னாலும் அதற்கு நேராக இருக்கும் எட்டாவது வீட்டு பலனும் ஒன்று போல தான் இருக்கும். அதாவது இரண்டிற்க்கும் எட்டிற்க்கும் ஒரு தொடர்பு இருக்கும். இரண்டாவது வீட்டிற்க்கு சொல்லும் பலன் போல எட்டாவது வீட்டில் இருந்தாலும் அதுபோல நடக்கும்.

எட்டாவது வீட்டில் மாந்தி இருக்கும் ஒரு ஆளை பார்த்தேன். அவர் வாயை திறந்து அந்தளவுக்கு பேசவில்லை. நானாகவே பல விசயங்களை கேட்டு அவர்க்கு பலனை சொல்லவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. வாய் தான் பேசவில்லை என்றாலும் அவர் செய்யும் குசும்பு வேலை அப்படிப்பட்டது. நிறைய வில்லங்கத்தை அவர் செய்தார். அதாவது அவர் தான் செய்வது என்று தெரியாமல் பல விசயங்களை செய்தார்.

மாந்தி இரண்டில் நின்றாலும் சரி எட்டில் நின்றாலும் சரி அவர்களின் செயல்பாடு அதிகப்பட்சம் வெளியுலகத்திற்க்கு தெரியாது போல செய்வார்கள். அது நல்லதல்ல என்று அவர்கள் புரிந்து செயல்பட்டால் நல்ல வாழ்க்கை கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு



2 comments:

Unknown said...

அண்ணா தைலகுளியல் வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் பண்ண வேண்டும்......

Ashok said...

Sir
என்ன தைலம் பயன்படுத வேண்டும் .தைலம் எங்கு கிடைக்கும்?.