Followers

Monday, April 24, 2017

கேள்வி & பதில்


வணக்கம்!
          நண்பர் KJ அவர்கள் கேது பனிரெண்டில் இருந்தால் அவர்களுக்கு மறுபிறப்பு இல்லை என்று சொல்லுகின்றனர். அதற்க்கும் இதற்கும் தொடர்பு உண்டா என்று வழிகாட்டிய சித்தர்கள் பதிவில் கேள்வி வந்தது.

வழிகாட்டிய சித்தர்கள் பகுதியில் சித்தர்கள் சொன்ன நல்விசயங்களை எடுத்து நமது பாணியில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். பொதுவாக சித்தர்கள் பற்றி எழுதுபவர்கள் அவர்களின் சாகசங்களைப்பற்றி சொல்லுவார்கள். இந்த சித்தர் இதனை செய்தார் என்று ஒவ்வொரு சித்தரின் பெயரையும் சொல்லி சொல்லுவார்கள்.

நான் கொஞ்சம் வித்தியாசமாக அவர்கள் சொன்ன நல்ல கருத்தை எடுத்து மக்கள் பயன்பெறவேண்டும் என்ற விதத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். ஜாதக கதம்பத்தை முழுமையாக படித்தால் அதில் சொல்லிருக்கும் கருத்து அனைத்தும் கரையேற்ற என்ன வழி என்பதை மட்டும் சொல்லுவேன். கதை சொல்லுவது கிடையாது.

பனிரெண்டில் கேது இருப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்கிறது என்பது தவறாகவே இருக்கின்றது. பல ஞானிகளின் ஜாதகத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை.

ஞானிகளின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் அவர்களுக்கு எல்லாம் கிரகங்கள் குண்டக்க மண்டக்க கணக்கில் தான் அமருகிறது. ஏகாப்பட்ட தோஷத்தோடு இருக்கின்றது. அந்த தோஷம் தான் அவர்களை ஞானிகளாக மாற்றுகிறது என்று நினைக்கிறேன்.

வழிகாட்டிய சித்தர்கள் பகுதியில் வரும் கருத்து. சித்தர்கள் சொன்ன நல்ல வழியை மட்டும் சொல்லுகிறேன். ஜாதகத்திற்க்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லை. ஆன்மீக தேடுதல் இருப்பவர்களுக்காக அதனை எழுதிவருகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

KJ said...

Thanks a lot sir..

nallur parames said...

தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை எதிர்பார்க்கிரேன் அண்ணா