Followers

Thursday, April 27, 2017

வழிகாட்டிய சித்தர்கள்


வணக்கம்!
          சித்தர்கள் தான் கண்டு உணர்ந்த விசயத்தை எடுத்து தன் சீடனுக்கும் கொடுத்துவிட்டு மக்களும் பயன்பெறவேண்டும் என்பதற்க்காக கோவில்களை உருவாக்கியுள்ளனர். மக்களுக்கும் அனைத்தும் கிடைத்து அவர்களும் வரவேண்டும் என்பதற்க்காக என்ன செய்யவேண்டும் என்று யோசித்து கோவில்களை உருவாக்கியுள்ளனர்.

கோவில்கள் உருவாக்குவதற்க்கு காரணம் மக்களை இழுப்பதற்க்கு என்ன செய்யவேண்டும் என்பதை உணர்ந்து கோவில்களை உருவாக்கியுள்ளனர். தான் உணர்ந்தை கோவில்களில் உருவாக்கி அதற்க்குள் அந்தசக்தி வைத்திருக்கின்றனர்.

தான் உணர்ந்ததை அடுத்தவர்களுக்கு கிடைக்கவேண்டும் என்று நினைத்தார்கள் பாருங்கள். அது தான் தெய்வ தன்மை வாய்ந்த ஒன்று. அவர்கள் அன்று அதனை செய்யவில்லை என்றால் நாம் இன்று வரை தேடிக்கொண்டு தான் இருக்கவேண்டும் அல்லது புத்திமங்கிய கூட்டமாக இருந்துக்கொண்டு இருக்கவேண்டும்.

சித்தர்கள் உருவாக்கிய கோவிலாக நாம் பார்த்து வணங்கினால் ஒரு சாதாரண கோவில்கள் கிடைக்கும் சக்தியை விட சித்தர்கள் உருவாக்கிய கோவில்களில் சக்தி அதிகமாக இருக்கும்.

ஆன்மீகத்தில் நல்ல நிலைமையில் இருப்பவர்கள் அனைவரும் சித்தர்கள் உருவாக்கிய கோவிலாக பார்த்து சென்று வணங்கி வருவார்கள். உங்களின் பகுதியிலும் சித்தர்கள் உருவாக்கிய கோவில்கள் இருந்தால் நீங்களும் அதனை சென்று வணங்கிவாருங்கள்.

இன்று சேலம் பயணம். நாளை சேலத்தில் இருப்பேன். அதன்பிறகு திருப்பூர் பயணம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Kalairajan said...

அய்யா
தாங்கள் அறிந்த கோவில்கள் சிலவற்றை சொன்னால் நன்றாயிருக்கும்

KJ said...

As far as i remember, Paambaati Sithar Marudhamalai Thiruthalam,
Bogar Palani,
Agathiyar Dharapuram Agastheesawar Kovil, Rajesh sir can tell more...

Also, Once there was an interesting Serial called "Sivamayam" telecasting in Sun tv by Radan network which is fully about 18 Sithars. In youtube, you can find those episodes.

Thanks
Sathishkumar Gs